01. காலம் ஒரு கொடியகனவாயிற்று உன் பிரியங்கள் என்னை மீளெழுப்பின உனது வார்தைகள் எனது காயங்களை ஆற்றின உன் பார்வைகள் தொலைந்து கொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்தன.. என்ன சொல்ல எனது சாம்பர் மேட்டிலிருந்து புதியமுளைகளை உருவாக்கும் உனது புன்னகைகளை என்னோடே விட்டுவிடு நான் பிழைத்துப் போகிறேன்… 02. நான் தயங்குகிறேன் மிகவும் உன் பிரியத்தின் சுவர்கள் கண்ணாடிகளால் ஆனவையாயிருக்கையில் கற்களை வீசிவிடக் கூடாதென்கிற தயக்கம்…
ஒருபுன்னகைகடந்துபோகிறது நிமிர்ந்து நடக்கும்நதியைப்போல….. சட்டென்றுபின்தொடர்ந்து முழிக்கிறது மனசுவாகனங்களின்தெருவில் மாட்டிக்கொண்டஒரு குழந்தையைப்போல, யாரும் கண்டுகொள்ளாத குழந்தையின் கண்ணீர்எனக்குள் நுழையும் ஒரு நதியின் கவிதையென வாகனங்களின்இரைச்சலையும்; மீறிஎன்காதுகளை அடைகிறது.புல்லாங்குழலின்சங்கீதம் த.அகிலன்
யாரும் புரிந்து கொள்ளவியலா? ஜடமாகவே இருந்துவிடுகிறேன் நான்…… காலம் என் கைகளில் திணித்துப்போன… நிறமற்ற கனவுகள்… எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்… தேவதைகள் யாருமற்ற எனது நிலத்தில் சருகுற்று… பேய்கள் வசிக்கட்டும்…. எப்போதேனும்… கொலுசுகளோடு வரும் யாரோ ஒருத்தி கண்டெடுக்கக் கூடும்… சருகுகளினடியில்…. சிக்குண்டு போன… யாரும்படிக்காத… எனது புத்தகத்தின்… இறுதிப் பக்கங்களை…..
குட்டிக் கவிதை என்றாலும் நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் அகிலன்!