
அன்பே
காற்றில் நழுவவிடும்
உன்
வார்த்தைகளில் கத்திகள்
வைத்தல்
எங்கனம் சாத்தியமாகிறது…
த.அகிலன்
கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…
சூரியன்தன் ரகசியங்களோடுநுழைகின்றான் எங்கும்விசாரணைகள் ஏதுமின்றிஎங்கும் நிரம்பிவழிகிறதுசூரியனின் ரகசியங்கள்காற்றுக்குக்கேள்விகளுமில்லைவேலிகளுமில்லை என்னுடையதும்உன்னுடையதும்கனவுகளுக்கும் கூடரகசியம் கிடையா எனதுமுற்றத்தில் விழுகிறதுபச்சை வேட்டைக்காரர்களின்நிழல்….. துப்பாக்கியின்கண்களிடம்காதல் இல்லைகோபமும் கிடையாது ஒருபெருநதியின்ஆழத்தில்தொலைக்கப்பட்டு விட்ட சாவி என்னிடம்நம்பிக்கைகள் இல்லைமுதலைகளால்அதை மீட்டுவிட முடியுமென்று….. சூரியனின்தடங்களற்ற தொலைவிற்கும்காற்றால்காவுகொள்ளப்படமுடியாதசுவடுகளைக் கைவிட்ட படியும்குயிலின் குரல்வழியேபயணிக்கும்என்புன்னகையாரும் அறியாதபடிக்கு…. த.அகிலன்
எல்லாவற்றிற்கும்சாட்சியாயிருப்பதன் இயலாமை எனை விழுங்குகிறது.. ஒருநாற்பது வயதுக்கன்னியின்கறுத்தப்பொட்டைப்போலநிஜத்தின் உறுத்தல்என் கனவுகளின் மேல்பயணிக்கிறது….. முடியாது புன்னகைக்கும்வேதனைக்கும்அழிவுக்கும்மீட்சிக்கும்அவமானத்திற்கும்……………………. இப்படிஎல்;லாவற்றுக்கும் சாட்சியாய்மௌனத்தை விழுங்கிக் கொண்டுஎத்தனை நாளைக்குஇருந்துவிட முடியும்…ம். த.அகிலன்
நான்வெற்றுத்தாள்களைவாசிக்கிறேன்…. குருதியும்ரணங்களும் வழியும்துயரத்தின் மிகு சொற்கள்அத்தாள்களின் மீதுஉறைந்துள்ளன…. தாள்களின்ரகசிய இடுக்குகளில்ஒழிந்திருக்கிறது..வேட்டைக்காரனின்அம்புகள் தீட்டியஅழுகையின் வரைபடம்.. எழுதப்படாதிருக்கிறஎந்தச்சேதியிடமும்புன்னகையில்லை…. தன் பின்னலைத்தளர்த்தியஒரு கிழவியின்சாபத்தின் சொற்கள்ஊரை நிறைத்தது… பின்பொருநாள்…பூவரசம் வேலிகளைத்தறித்தபடியெழும்கோடரியின் கரங்கள்ஒரு குழந்தையிடமிருக்கக்கண்டேன்…. தடுக்கமுயலும்கிழவியிடமிருந்து எழும்இயலாமையின் சொற்கள்தேய்ந்து போயிற்றுஊடுபத்தியகைவிளக்கைப்போல…..
குட்டிக் கவிதை என்றாலும் நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் அகிலன்!