மலர்களின்
மெளனம் உன்னைப்போல்
அழகானது
ஆனால்
உனது மெளனங்களோ
முட்களைப்போல……..
த.அகிலன்
கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…
எல்லாவற்றிற்கும்சாட்சியாயிருப்பதன் இயலாமை எனை விழுங்குகிறது.. ஒருநாற்பது வயதுக்கன்னியின்கறுத்தப்பொட்டைப்போலநிஜத்தின் உறுத்தல்என் கனவுகளின் மேல்பயணிக்கிறது….. முடியாது புன்னகைக்கும்வேதனைக்கும்அழிவுக்கும்மீட்சிக்கும்அவமானத்திற்கும்……………………. இப்படிஎல்;லாவற்றுக்கும் சாட்சியாய்மௌனத்தை விழுங்கிக் கொண்டுஎத்தனை நாளைக்குஇருந்துவிட முடியும்…ம். த.அகிலன்
என் கடைசி வரிகளைகடல் மடியில் எழுதி வருகிறேன்யாரிடமும் பகிர்ந்து கொளமுடியாத படிக்கு பேசாமல் இருக்கும்அலைகளிடம்தொலைந்து போகும்கண்ணீர்த்துளியைப் போலபோய் விடட்டும்என் கவிதை எல்லாம்முடிந்து போய் விட்டது எப்போது கேட்டாலும்யோசிக்காமல்பணம் தரும் பெரியம்மாவின்கண்ணீர் நிறைந்த முகம்கடந்து வந்தாகி விட்டது இனிமறுபடியும் வீட்டு முற்றத்துக்குப்போய்விட முடியாது இனிஅண்ணியிடம் சோற்றைப்பிசைந்து தருமாறு சண்டையிட முடியாது இனிகுட்டிப் பையனின் எச்சில் முத்தங்கள்கிடையவே கிடையாது இனிஎன் தேவதையைஉயிர் கொல்லும்அவள் கண்களை மறுபடியும்சந்திக்கவே முடியாது இனி எப்போதும்உயிருள்ள ஒரு கவிதைஎன்னால்எழுதவே…
என் அடையாளம்குறித்த கேள்விகள்கிளம்புகின்றனபூதாகாரமாய்… அப்பனுக்கும்அம்மைக்கும்ஆயிற்றுஉயிரும் உடலும். எனதுபுன்னகைகையைகாலம் கொண்டேகிற்று. என்னிடம் எனக்கென்றுஏதுமில்லை. உனதுமுத்தங்களையும்நினைவுகளையும் கூடநீயேசொந்தங் கொண்டாடுகிறாய். யாரோடும் பகிர முடியாது போனபுன்னகையும்முத்தங்களும்துயரங்களும்என்னுடையவைதானென்றுயாருக்குத்தெரியும்? என் வார்த்தைகளின்அர்த்தம் கூடஎனதாயில்லை. மறுக்கமுடியாத்துயருள்மூழ்கியஎனது கவிதைகள்என்னின்று அகன்றன. இப்போதுஎனக்குள்கேள்விகளை நிரப்புகிறதுதனிமை. புன்னகைக்கும்வேதனைக்கும்இடையிலான தூரங்கள்நீண்டபடியிருக்கின்றன…. ஆங்காங்கேவிரிந்தபடியிருக்கும்காலத்தின் கண்ணிகளில்..வீழ்ந்தபடியிருக்கும்எனது பாதங்கள்…. ஏதேனும் ஒருபொழுதில்முளைக்கும்அழத்தோன்றாவொருமனக்காந்தல்உனதுமுத்தங்களிற்காய் ஏங்கும். ஒரு பொழுதின்துயருள் தோன்றிஎழுதவியலாது போனகவிதை வெறுமையைநிரப்புகிறது மனசுள். நினைவறையின் மடிப்புகளினின்றும்பறப்படுகின்றனஇன்னும்பகிரப்படாத்துயரங்கள்அழுவதற்கானவெட்கங்கள் ஏதுமற்று…இரண்டு வருடங்களிற்கு முன்பு ஒரு தூக்கமற்ற இரவில்…
இந்தக் கவிதையும் நன்றாக இருக்கிறது.
வலைப்பூ மாற்றங்களும் நன்றாக வந்திருக்கின்றன. வாழ்த்துக்கள் அகிலன் 🙂
பின்னூட்டங்களை மட்டுறுத்தலில் இட்டால், தமிழ்மணத்தில் “அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியில் உங்கள் வலைப்பூ தெரியும் என்று நினைக்கிறேன். “அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியில் உங்கள் வலைப்பூவும் பஹீமா ஜஹான் கவிதைகள் வலைப்பூவும் வருவதற்கான ஏற்பாட்டை அவசியம் செய்யுங்கள் அகிலன். மேலதிக உதவிக்கு ப்ரியன்(விக்கி)யை அணுகுங்கள்.