Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

படகில் நுழையாக் கடல்

த.அகிலன், April 21, 2010April 13, 2024

refuge

அத்தனை எளிதன்று
அகதியாதலும்
அதனின்று விடுபடலும்.

நீண்ட அலைதலின் முடிவில்
நதி மருங்கில் தேங்கிய
துரும்பைப் போலவோ
அல்லது
கடல் வீசியெறிந்த
தகரப் பேணியைப்போலவோ
எறியப்பட்டிருக்கிறது வாழ்வு.

துரும்பைத் திரும்பவும்
அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின்
எத்தனங்களோடிருக்கிறது உலகம்.
அலைதலும் தொலைதலும்
எறியப்படுதலின் வலியும்
துரும்பே அறியும்.

திடுக்கிட்டு விழிக்கும்
எல்லாக்கனவுகளும்
விசாரணையிலேயே தொடங்குகிறது.

நான் ஓர் அகதி
என்னிடமிருப்பதோ
அவளைச் சேர்வதான எத்தனங்களும்
விசாரணைக்கான பதில்களும்
கொஞ்சக் காகிதங்களும்

திரும்பவும் திரும்பவும்
பெருகும் விசாரணைக்கேள்விகள்
செவிகளில் நுழைகையில்
நான் நினைக்கத் தொடங்குவேன்
படகில் நுழையாக் கடலைக்குறித்து.

அத்தனை எளிதன்று
அகதியாதலும்
அதனின்று விடுபடலும்.

கவிதைகள் அகதிஅகதி வாழ்வுஈழம்கிளிநொச்சிதமிழக அகதிகள்வன்னி

Post navigation

Previous post
Next post

Related Posts

முழுவதும் உனக்கே..

July 10, 2006December 1, 2009

என் காதலே! இந்தப் பூமிப்பந்தின்எல்லா நுனியிலும்நீதான்நிறைந்து கிடைக்கிறாய்….. என் வார்த்தைகள்திணறும். உனைவிபரிக்கச் சொல்லற்றுத்துடிக்கும்என் கவிதை…. உதிரமுடியாத ப+க்களை எப்படித்தான்கைவசம் வைத்திருக்கிறாய்மாறாச் சிலிர்புடன்காதலின் தெருக்கள் எங்கும்விரவிக்கிடக்கிறது பூக்கள். குடித்துத் தீர்ந்தபின்பும்திகட்டித் திகட்டிமிஞ்சிக்கிடக்கிற அன்பின் பானமாய்நிறைந்து வழிகிறாய்.. என்வாழ்வின் ஒவ்வொருதுளியிலும்உனக்குத்தான்பாதிசீச்சிமுழுவதுமே உனது த.அகிலன்

Read More

சாட்சியாயிருத்தல்…..

October 13, 2006December 1, 2009

எல்லாவற்றிற்கும்சாட்சியாயிருப்பதன் இயலாமை எனை விழுங்குகிறது.. ஒருநாற்பது வயதுக்கன்னியின்கறுத்தப்பொட்டைப்போலநிஜத்தின் உறுத்தல்என் கனவுகளின் மேல்பயணிக்கிறது….. முடியாது புன்னகைக்கும்வேதனைக்கும்அழிவுக்கும்மீட்சிக்கும்அவமானத்திற்கும்……………………. இப்படிஎல்;லாவற்றுக்கும் சாட்சியாய்மௌனத்தை விழுங்கிக் கொண்டுஎத்தனை நாளைக்குஇருந்துவிட முடியும்…ம். த.அகிலன்

Read More

நின்று போன கவிதை…

July 2, 2007December 1, 2009

உதிர்ந்து விழுகிறஇலையின்நடனம்போலநிகழ்ந்து போகிறது உன் பிரிவு… அங்கேயே..அப்போதே..நின்று போனஎன் வார்த்தைகள்காத்திருக்கும்மறுபடியும்கவிதையின் சாலைக்குஅழைத்துப் போகும்உன் புன்னகையின் வருகைக்காய்..

Read More

Comments (2)

  1. shajini says:
    June 5, 2010 at 2:42 pm

    I like ur blog i can see ur feelings.its look different..all the best for ur future..

  2. mayoo mano says:
    August 20, 2010 at 5:24 am

    //அத்தனை எளிதன்று
    அகதியாதலும்
    அதனின்று விடுபடலும்//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2026 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes