Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

காதலின் சிறைக்கைதி…

த.அகிலன், February 5, 2009December 1, 2009

உலகத்தின் அழகான வார்த்தைகள் ஒருவனிடம் மண்டியிட்டுக்கொண்டிருந்தன. என்னையும் உன் காவியங்களில் சேர்த்துக்கொள் என்று அவனிடம் கெஞ்சின. பெண்கள் அவனது வார்த்தைகளிடம் அடிமையாயிருந்தனர். வார்த்தைகள் அவனிடம் அடிமையாயிருந்தன. முறிந்த சிறகுகள் என்கிற தன் காதல் காவியத்தை கலீல்ஜிப்ரான் உலகத்திற்குக் கொடுத்தார். அந்த அளப்பெரிய காதலனுபவத்தை ஜிப்ரானுக்கு பரிசளித்தவள் அவனது செல்மா.

ஜிப்ரான் தன்னுடைய பதினெட்டாவது வயதில் தன் தந்தையின் ஆத்ம நண்பரான பாரிஸ் எபாண்டி கராமி என்பவருடைய செல்ல மகளாக செல்மாவைச் சந்திக்கிறான். முதல் பார்வையில் அந்த ஆன்மாவை உருக்கும் காதல் பிறந்துவிடுகிறது. தன்னுடைய இன்னொரு பாதியைக் கண்டுகொண்டதாக ஜிப்ரானின் மனம் கூத்தாடியது. செல்மா பேரழகி. இவளுடைய அழகை எந்த ஓவியனாலும் முழுமையாகப் பிரதிசெய்துவிடமுடியாது அவ்வளவு அழகு அவள். ஜிப்ரான் செல்மாவைச் சினேகிக்கத் தொடங்கினான். செல்மாவும்..

எப்போதும் காதலுக்கு அந்தஸ்து எதிரியாகவே இருக்கிறது. காதலுக்கு மட்டும் விதவிதமான எதிரிகள். சிலசமயங்களில் காதலர்களே காதலின் எதிரிகளாகிவிடுகிறார்கள். பேரழகியும் பணக்காரியுமான செல்மாவை அடைந்துவிட நிறையப்பேர் துடிக்கிறார்கள். அவர்களுடைய தூக்கத்தையெல்லாம் செல்மா கெடுத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் செல்மாவின் கனவுகளில் ஜிப்ரான் அலைந்துகொண்டிருந்தான்.

இந்தக் காதலுக்கு வில்லன் ஒரு பாதிரியார் வடிவத்தில் வந்தான். கழுத்தில் சிலுவையும் மனசுள் அழுக்கையும் சுமந்துகொண்டிருக்கும் பாதிரி. தன்னுடைய மருமகனுக்கு செல்மாவை மணமுடிப்பதன் மூலம் அவனைப் பெரும் பணக்காரனாகவும் அழகியின் கணவனாகவும் மாற்றி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று திட்டம் போட்டான்.

செல்மாவின் தந்தையை வார்த்தைகளால் மயக்கி அந்தத்திருமணத்தை நடத்தியும் முடித்துவிட்டான். காதலின் வெளியில் சுதந்திரமாக மிதந்துகொண்டிருந்த செல்மாவினதும் ஜிப்ரானினதும் சிறகுகள் முறிந்து விழுந்தன. செல்மாவின் தந்தை கடுமையாக நோயுற்றிருக்கையில் இந்தத் திருமணம் நடந்தது. அதற்கு முன்பாக ஜிப்ரானை அழைத்த செல்மாவின் தந்தை “ஜிப்ரான் என்னை உன் தந்தைபோலவும் செல்மாவை உன் தங்கையைப்போலவும் நேசிக்கவேண்டும்” என்று சொன்னார். ஜிப்ரான் தன் காதலை உள்ளே ஒழித்து வைத்துக்கொண்டு புன்னகை புரிந்தான்.
ஜிப்ரானின் பிரியத்துக்குரிய செல்மாவின் இல்வாழ்க்கை பூத்துக்குலுங்கவேண்டும் என்று அவன் பிரார்த்தித்தான்.

ஆனால் அவனுடைய ஒப்பற்ற மலர் வாடிவதங்கியது. செல்மாவின் கணவன் நாள் முழுதும் மதுவிடமும் மாதர்களிடமும வசமிழந்து கிடந்தான். தன் இனிய காதலியின் வாழ்வின் துயரங்களில் எல்லாம் அவளுக்கு துணையிருந்தான் ஜிப்ரான். திருமணத்திற்குப்பின்பும் அவளைச் சந்தித்து அவளுக்கு ஆறுதலாயிருந்தான் எல்லையற்ற தன் நேசத்தை அவளுக்கு வழங்கினான். தன்னுடைய இதயத்தை அவளுடைய துயரங்களின் கல்லறையாக மாற்றினான்.

ஆனால் விதி எல்லாவற்றையம் விட வலியது. திருமணத்திற்குப்பிறகு ஜிப்ரானைச் சந்திக்கக் கூடாதென்று செல்மாவுக்கு தடை விதிக்கப்பட்டது தனது மனதுக்கு ஆறதலாக இருந்த ஒரே ஒரு ஆத்ம நண்பனை காதலனையும் இழந்து செல்மா துன்பத்தில் உழன்றாள். கருவுற்றிருந்த செல்மா தன் குழந்தையின் மழலைச் சொல்லாவது தன் துயரங்களினின்றும் தன்னை விடுவிக்கும் என்று நம்பினாள்.

குழந்தை பிறந்து தன் தாயின் கண்களை ஒரு முறை பார்த்தது. இந்த உலகத்தின் பேரன்பு முழுவதையும் தன் குழந்தைக்காக வைத்துக்கொண்டிருந்த செல்மா தன் மகனை முத்தமிட்டாள். ஆனால் அந்தக் குழந்தை அதுவே அவனது தாயைப் பார்த்த கடைசித் தடைவை தனது தாய் இந்தப்பூமியின் தன்பெயரால் துன்பப்படகூடாது என முடிவு செய்தவனைப்போல அந்தக் குழந்தை இறந்து போயிற்கு ஒரு கறுத்தநாளில். தனது மகனின் இறந்து போன உடலை முத்தமிட்டபடி செல்மா சொன்னாள் “மகனே நீ என் துயரங்களை போக்க வந்தவன் துயரங்களில்லா தேவதைகளின் நகருக்கு என்னை அழைத்துச் செல்ல வந்தவன்” அந்த வார்த்தைகளே செல்மாவின் இறுதி வார்த்தைகள். தன்னுடைய பிரியமான காதலனும் தனக்கு கிடைக்காமல் மகனும் கிடைக்காமல் உயிர்வாழ விரும்பாத செல்மா மரித்தாள்.

செல்மாவின் கணவன் அவளது மரணத்தின் போதும் குடித்துக் கும்மாளமிட்டான். மணப்பெண்போல் அலங்கிரிக்கப்பட்ட செல்மாவின் உடலை கல்லறைத்தோட்டத்திற்கு ஜிப்ரான் எடுத்துச் சென்றான். அவளுடைய குழந்தையை அவளுடைய உள்ளங்கைகளிலேயே வைத்தான். (தாயின் கரங்களே குழந்தையின் சவப்பெட்டியானது என்று எழுதுகிறான் ஜிப்ரான் பின்னர்) தனது பியம் முழுவதுமே மண்ணில் புதைந்துபோவதை ஜிப்ரான் பார்த்தான். இனி என்றைக்குமே தனது முறிந்த சிறகுகளால் பறக்கவியலாது என்பதை அவன் உணர்ந்தான்.

அவன் சொல்கிறான்….

ஓ பெய்ரூட் நகரில் சிதறிக் கிடக்கும் என்து இளம் பருவத்து நண்பர்களே
பைன் மரக் காட்டினருகே அமைந்துள்ள அந்த சமாதியைக் கடந்துசெல்லும் போது அதன் அருகே அமைதியாய் மெல்ல நடந்த செல்லுங்கள்
உங்கள் காலடியோசைகள் இறந்தவரின் ஆழ்நத் உறக்கத்தை கலைத்து விடக்கூடாது.

செல்மாவின் சமாதியின் முன்னால் அடக்கமாக நில்லுங்கள்
அவள் உடலை மூடியிருக்கும் மண்ணை வாழ்த்துங்கள்
என்பெயரை ஆழ்ந்த பெருமமூச்சுடன் உச்சரித்துவிட்டு
தனக்குத் தானே இப்படிச் சொல்லுங்கள்

காதலின் சிறைக்கைதியான கடல்கள் கடந்து வாழும்
ஜிப்ரானின் எல்லா நம்பிக்கைகளும் இங்கே தான் புதையுண்ட கிடக்கின்றன.
இந்த இடத்தில் தான் அவன் தனது மகிழ்ச்சியை இழந்தான்
இங்கே தான் அவன் கண்ணீர் வற்றிப் போயிற்று
இங்கே தான் அவன் தனது சிரிப்பை மறந்து போனது.

வாழ்நாள் முழுதும் தன் செல்மாவைக் காதலித்துக்கொண்டிருந்த கலீல் ஜிப்ரான் அவளது கல்லறையில் எதிரில் சொல்லிய வாசகங்கள் இவை. என்றைக்கும் தீராக்காதல் அவனுடையது.

நன்றி: மல்லிகை மகள் பிப்ரவரி இதழில் வெளியான எனது ஒரு காதலன் ஒரு காதலி கட்டுரையியில் இருந்து ஒரு பகுதி.

காதல் சிலுவையில்

Post navigation

Previous post
Next post

Related Posts

காதல் சிலுவையில் 01

September 15, 2008March 14, 2012

நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொள்.. ஒரு மழைநிசியில் நீ கொண்டு வந்த பிரியங்களையெல்லாம்.. மழைநின்ற நண்பகலில் எடுத்துக்கொண்டு வெளியேறினாய்.. வானவில் அழியத்தொடங்கியிருந்த அந்த மழைப்பகல் கோடையாகிற்றெனக்கு மட்டும். பிறகு பெய்த…

Read More

சாத்தானின் காதலி

February 7, 2009December 1, 2009

காதல் எப்போதும் தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கிறது. உலகத்தின் நியதிகளைச் நீர்த்துப்போகச் செய்யவும் தனக்கான விதிகளை எழுதிக்கொள்ளவும் காதலால் முடிந்திருக்கிறது. காதலின் அழகான முடிச்சுக்கள் விழுகின்ற இடங்கள் நம்பமுடியாதவை சிலசமயங்களில் அதிர்ச்சிகளைத் தரவல்லவை. காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது.. தன்னைத்தானே. எந்த எதிர்பார்ப்புகளுமற்று ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசளிக்காத காதலியின் பின்னால் அலைந்துகொண்டேயிருப்பான் ஒருத்தன்… தன்னைச் சட்டைசெய்யாது.. வேறுயாரோ ஒருத்தியின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் ஒருத்தனிடம் காலம் முழுதும் தன்னை நிராகரிக்கிற ஒருவனிடம்…

Read More

காதல் சிலுவையில் 04

September 28, 2008March 14, 2012

இதுவரை எழுதாத சொற்கள் கொண்டவொரு கவிதையை எழுதும் என் பிரயத்தனங்களை ஏளனம் பொங்கப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாய் நீ என்னுடைய வார்த்தைகளையெல்லாம் அடிமைசெய்து வைத்துக்கொண்டு. கூரையில் நிரந்தரத் தாளமெனப் பொழிந்து கொண்டிருந்துவிட்டு சட்டென்று நின்று போன மழையைப்போலப் போய்விட்டாய்.. உதிர்ந்து கிடக்கிற கொண்டல் பூக்களை இணைத்துக் கோலங்கள் செய்தபடி காத்திருக்கிறேன் நான்.. நீ வரும் திசைகளின் புகார்கள் விலகுவதாயில்லை. சில கவிதைகள் நினைவுக்குள் அலைந்தன. உன்னை நினைவூட்டும் பொருட்கள் இத்தனை தானென்ற என்…

Read More

Comments (7)

  1. தமிழன்-கறுப்பி... says:
    February 5, 2009 at 7:50 am

    மல்லிகையில் அகிலனின் கதையும் எழுதப்பட்டிருக்குமோ? அகிலனும் ஒரு காதலன்தானே, அந்தக்கதைதான் எனக்கு வேணும் 🙂

  2. valaipookkal says:
    February 5, 2009 at 8:05 am

    Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven’t registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

  3. அனுஜன்யா says:
    February 5, 2009 at 9:27 am

    பிரமாதமான கட்டுரை. முழுதும் பிரசுரிக்கலாமே.

    ரொம்ப நாளாக இங்க வரணும்னு. நேரப் பிரச்சனை. மேலும், பொறுமையாக, நிதானமாகப் படிக்க வேண்டியவை உங்க எழுத்துகள்.

    அனுஜன்யா

  4. viji says:
    February 11, 2009 at 9:17 am

    தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

  5. anjalin says:
    April 9, 2009 at 7:37 pm

    you should write more i was so creayz about yur writing you

  6. NISHA says:
    June 19, 2009 at 8:08 pm

    Ungalathu ella padaipukalum piramatham..ennaku emmamo kathalil vali irrukum pola irruku…kayangal oruvanai muttal akkum illai kavinjan akkum.. Kavinjan akiya ungallu valthukkal…:)

  7. சு.மோகன் says:
    October 9, 2010 at 11:43 am

    நண்பரே,

    கலீல் ஜிப்ரான் குறித்து ஒரு பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கான விவரங்களைச் சேர்க்க கூகுளில் தேடியபோது இந்தக் கட்டுரை கிடைத்தது. மிகவும் ரசித்தேன். தங்களின் வார்த்தைப் பிரயோகம் மலைக்கவைக்கிறது.

    தங்களுக்கு நேரமும், விருப்பமும் இருந்தால் என்னுடைய எழுத்துக்களைப் பற்றி உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்.

    நன்றி…

    http://sumohan.blogspot.com/
    http://thenir-neram.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2026 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes