Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

கேவலமான பிரார்த்தனையும் துயரவியாபாரமும்…

த.அகிலன், January 29, 2009August 27, 2010
01.

என் சனங்களின் பசியை
எழுதும்
இந்த வார்த்தைகளின்
வெட்கத்தையும் துயரையும்
நீ
அறிவாயோ இறைவா?

எனது
குழந்தைகளின் இரவுகளை
தயைகூர்ந்து
வெடிச்சத்தங்களால்
நிரப்பாதிரும்..

இரண்டு
துப்பாக்கிகளுக்கிடையில்
மிரள்கிற அவர்களின்
மழலைச் சொற்களின்
அச்சத்தை விலக்கும்..

என்
சனங்கள் பாவம்
முன்னொரு போது
போரினின்று
நான் வெளியேறுகையில்
ஒன்பதாம் திசையில்
வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை
அவர்களுடைய வானத்திலேயும்
ஒளிரச்செய்யும்
என் ஆண்டவரே..

02

என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
சுயநலமிக்கவை….

பதுங்குகுழியின்
தழும்புகளை,
கண்ணிவெடியில்
பாதமற்றுப்போனவளின் பயணத்தை,
மற்றும்
வானத்தில் மிதந்த
ஒரு பேரிரைச்சலுக்கு
உறைந்து போன குழந்தையின் புன்னகையை…

நாளைக்கான நிபந்தனைகள் ஏதுமற்ற
ஓய்வுப்பொழுதொன்றில்
வெற்றுத்தாளில் அழத்தொடங்குகின்றன.

என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
அயோக்கியத்தனமானவை.

துப்பாக்கிகளிடையில்
நசிபடும் சனங்களின் குருதியை
டாங்கிகள் ஏறிவந்த
ஒரு சிறுமியின் நிசிக்கனவை
மற்றும்
தனது ஊரைப்பிரியமறுத்த
ஒரு கிழவனின் கண்ணீரை

போரின் நிழல்விழா வெளியொன்றின்
குளுமையிலிருந்து
பாடத்தொடங்குகின்றன..

என்னிடமிருக்கும்
இந்தச் சொற்கள்
சுயநலமிக்கவை….
அயோக்கியத்தனமானவை…
ஆயினும் என்ன
பிணங்களை விற்பதற்கு முன்பாக
துயரங்களை விற்றுவிடுவதுதான்
புத்திசாலித்தனமாது..

கவிதைகள்

Post navigation

Previous post
Next post

Related Posts

முத்தங்கள்

July 2, 2006December 1, 2009

அன்பேஉனது முத்தங்களைவிடவும்அழகானவைஅதற்கு முன்னதும்பின்னதுமானவெட்கங்கள் த.அகிலன்

Read More

பறத்தலின் திசை

June 17, 2009December 1, 2009

எனது கவிதைக்குள் ஒழிந்திருக்கிறது திசையறியாப்பறவையின் சிறகுகளின் தத்தளிப்பு.. உள்ளோடும் சொற்களினதும் வாக்கியங்களினதும் அர்த்தங்களை நான் மறந்துவிட்டேன் இறகினைப்போல் அலைந்து கொண்டிருக்கிறது கவிதை திசையறியாப் பறத்தலின் தவிப்பில் உதிரும் இலைகளைப் பின்பற்றியபடியிருக்கிறது மனம் எனை ஏந்திக்கொண்டிருப்பது காற்றின் எந்தக்கிளை

Read More

கடைசிக் கவிதை….

November 7, 2006December 1, 2009

என் கடைசி வரிகளைகடல் மடியில் எழுதி வருகிறேன்யாரிடமும் பகிர்ந்து கொளமுடியாத படிக்கு பேசாமல் இருக்கும்அலைகளிடம்தொலைந்து போகும்கண்ணீர்த்துளியைப் போலபோய் விடட்டும்என் கவிதை எல்லாம்முடிந்து போய் விட்டது எப்போது கேட்டாலும்யோசிக்காமல்பணம் தரும் பெரியம்மாவின்கண்ணீர் நிறைந்த முகம்கடந்து வந்தாகி விட்டது இனிமறுபடியும் வீட்டு முற்றத்துக்குப்போய்விட முடியாது இனிஅண்ணியிடம் சோற்றைப்பிசைந்து தருமாறு சண்டையிட முடியாது இனிகுட்டிப் பையனின் எச்சில் முத்தங்கள்கிடையவே கிடையாது இனிஎன் தேவதையைஉயிர் கொல்லும்அவள் கண்களை மறுபடியும்சந்திக்கவே முடியாது இனி எப்போதும்உயிருள்ள ஒரு கவிதைஎன்னால்எழுதவே…

Read More

Comments (5)

  1. king... says:
    January 29, 2009 at 5:35 am

    துயரங்களை விற்றுவிடலாம் நினைவுகளை? 🙁

  2. GAVIN says:
    February 1, 2009 at 8:46 pm

    யதார்த்தமான வரிகள்….

  3. Arthi says:
    March 15, 2009 at 2:49 am

    sir
    i would like to buy your book maranathin vasanai.plz tell me about the publication.i can feel your pain n pray for u . thank u

  4. anjalin says:
    April 29, 2009 at 8:34 pm

    every time i read your poem you make me sad and cry you have so powerful words keep up the work

  5. திண்டுக்கல் தனபாலன் says:
    September 13, 2012 at 5:10 am

    சிந்திக்க வைத்த வரிகள்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_12.html) சென்று பார்க்கவும்… நன்றி…

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க… நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes