Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

கோடையைப் பற்றி இரண்டு குறிப்புக்கள்..

த.அகிலன், August 13, 2007December 1, 2009

01.
உன்
உப்புக்கரித்த முத்தத்தின்
ஞாபகங்களை
தனது இறகுகளால்
வருடிக்கொண்டேயிருக்கிறது கோடை.

வாசல் வரை வந்தும்
உள்ளே வராத
தோழியைப்போல்..
முற்றத்தில் படர்ந்து
பின்
வெளியேறிப்போகிறது வெயில்

அறை முழுதும்
தன் தகிப்பை நிரவியபடி.

02.
கோடை
தீர்ந்து விட்டது…

தகிப்பின்
வாடையை
குடித்தபடி அலைந்து
நிழலொடுங்கிக் கிடக்கிறது
கோடையின் குழந்தை….

மழைக்குத் தாளமிடும்
சிறுமியின் புன்னகை
கூரை
கடந்து விழும்
முதல் துளியில்
கரைந்தவிழ

அவள்
காலடியில் உடைந்து
அழத்தொடங்குகிறது
கோடை..

கவிதைகள்

Post navigation

Previous post
Next post

Related Posts

பலூன்காரன்….

June 20, 2007December 1, 2009

தலைகளாலானதெருவில்…. குழந்தைகளின் புன்னகைள் நிரம்பிய வண்ணங்களை விற்கிற பலூன்காரன்…. தன்புன்னகையைக் கேட்டு வீரிட்டழும் ஒரு குழந்தை விக்கித்து ஓய்கையில்… ஏனோஎச்சில் ஒழுக என்பெயர் சொல்லிச்சிரிக்கும்…ஒரு முகம்கடந்து போகிறது என்னை….

Read More

எறும்புகள் உடைத்த கற்கள்

September 4, 2006December 1, 2009

வலிஉணரும் தருணங்களில்எங்கிருந்தோ முளைக்கிறதுஎனக்கான கவிதை காற்றழிந்த மணல்வெளியில்காத்திருக்கும்என்காலடிகாற்றில் அழிவதற்காய் நான்கானலைஅருந்த தயாராகையில்எப்படியாவது காப்பாற்றிவிடுகிறது மேகம் எனக்குத் தெரியும்கடித்துவிடுகிறகடைசிநொடி வரைக்குமேபுகழப்படும் எறும்புகள் ஆனாலும்எறும்புகளிற்குகவலைகிடையாஎதைக்குறித்தும் என்வழியெங்கும்நிறுவிக்கிடக்கிறதுஎறும்புகள் உடைத்தகற்கள் த.அகிலன்

Read More

சாத்தானுடன் போகும் இரவு

September 7, 2007December 1, 2009

சாத்தான்கள்ஊருக்குள்திரும்பின.சாத்தான்கள் எப்போதும்புன்னகைகளைவெறுப்பவை.. பகலின் நிறம் மரணம்இரவின் நிறம் பயம்என்றாகியதுநாள். ஊர்பகலில் இறந்தவனைஅடக்கம் பண்ணிவிட்டுஇரவில் அடுத்தசாவிற்குகாத்திருக்கலாயிற்று. பாதித்தூக்கத்தில்அடித்து எழுப்பப்பட்டவெறியில்அலைந்தன சாத்தான்கள். இரவுக்குக் கைகள்முளைத்தது.., கேள்விகளற்றவெறுங்கணத்தில்இரவின் கரங்களில்கோடரிகள் முளைத்தன.., மனிதர்களைத்தறித்து விழுத்தியபடிதனது நிறத்தைஊரெங்கும் பூசிச்செல்கிறதுஇரவு விடியலில்உருவங்களின் கரங்களில்இருந்ததுஇரவின் கோடரி. சூரியனைப்போர்த்தபடிகேள்விகளற்றுநடந்துபோகிறதுஇரவு சாத்தானுடன்.

Read More

Comments (12)

  1. Anonymous says:
    August 13, 2007 at 8:11 pm

    ஒரு சில மீள் வாசிப்புகளின் பின்பு
    மன அடுக்குகளில் எதையொ விட்டு விட்டு நழுவிப் போய் விடுகின்றன உங்கள் கவிதைகள்…
    மிருதுவான இயற்கையை பற்றிக்கொண்டு கோர்க்கப்படுகிற சொற்கள் ஏதொ ஒரு சிலிர்ப்பை ஊட்டவே செய்கின்றன… நன்று.
    வாழ்த்துககள்…
    உங்களை ஆழ வாசிக்கிறேன்..

    வேல்.சாரங்கன்
    http://www.vaanampaadi.blogspot.com

  2. த.அகிலன் says:
    August 14, 2007 at 8:17 am

    அப்படியா நன்றி சாரங்கன்.

  3. கென் says:
    August 14, 2007 at 10:00 am

    உப்புக்கரித்த முத்தத்தின்
    ஞாபகங்களை

    அறை முழுதும்
    தன் தகிப்பை நிரவியபடி.

    :)))

  4. த.அகிலன் says:
    August 14, 2007 at 1:51 pm

    கென் என்ன சிரிப்பா சிரிக்கிறீங்க சொல்லீட்டு சிரிங்கய்யா அதில காமெடி என்ன இருக்குன்னு….

  5. Raja says:
    August 14, 2007 at 2:16 pm

    கென் அப்படித்தான் அகிலன்..

    முத்தத்தைப் பற்றிப் பேசினாலே இப்படித்தான் சிரிக்க ஆரம்பித்துவிடுவான். ஏனென்றுதான் தெரியவில்லை.

    சிறுமியின் புன்னகைக்கு முன் கவிழ்ந்தழுத கோடை அழகு அகிலன்..

  6. தூயா [Thooya] says:
    August 14, 2007 at 2:44 pm

    பல தடவைகள் படித்தேன்..
    அருமை

  7. Tharuthalai says:
    August 14, 2007 at 3:19 pm

    வாசல் வரை வந்தும்
    உள்ளே வராத
    தோழியைப்போல்..
    முற்றத்தில் படர்ந்து
    பின்
    வெளியேறிப்போகிறது வெயில்

    அறை முழுதும்
    தன் தகிப்பை நிரவியபடி.

    …….

    அட்றா சக்க…. அட்றா சக்க….

    நிஜமாவே கவிததான் எழுதறீங்க…..

    -தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-07)
    என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

  8. நளாயினி says:
    August 14, 2007 at 11:42 pm

    கென் a dit…
    உப்புக்கரித்த முத்தத்தின்
    ஞாபகங்களை

    அறை முழுதும்
    தன் தகிப்பை நிரவியபடி.

    :)))

    mm.

    ம்.. ஆழ்ந்த அவதானிப்பு. பாராட்டுக்கள் கென். அகிலனுக்கும் தான்.

  9. த.அகிலன் says:
    August 17, 2007 at 1:56 pm

    பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  10. நளாயினி says:
    August 17, 2007 at 11:54 pm

    என்ன அகிலன் டக்கெண்ட எஸ்கேப்பான மாதிரி ஒரு உணர்வு எனக்குள். கவிதைகள் உணர்வை பேசும். கண்ட பிடிப்பது வாசகரின் வேலை. ம்.. எப்பதான் உண்மையை உண்மை என சொல்லப்போறியளோ. ம்.. அதுக்கும் ஒரு தில் வேணும். கவிதை எழுதினா மட்டும் போதாது.ghtk; cq;fil Ms;.

  11. த.அகிலன் says:
    August 18, 2007 at 12:04 pm

    அது சரி என்ல ஆள் பாவம் எண்ணடதெல்லாம் இருக்கட்டும் நளாயினி அக்கா.

    என்ன நான் எஸ்கேப்பானான் அதைச்சொல்லுங்கோ.

    எந்த உண்மைய நான் சொல்லவில்லை…எதை ஒத்துக்கொள்ளவில்லை என்ன தில்வேணும் கொஞ்சம் விளக்கினா உங்களிற்கு புண்ணியமாப்போகும்.

    கடைசியா என்ன என்ன கவிதை எழுதலாம் எண்ணடிறியளா வேண்டாம் எண்டிறியளா

  12. நளாயினி says:
    August 21, 2007 at 11:34 pm

    ஐயோ போச்சுடா. எழுதுங்கோ எழுதுங்கோ. தாரளமா. ஆச்சரியமான கவிதை மொழிகள். உணர்வுகள். ரசிக்க என்போன்ற வாசகர்கள் காத்திருக்கிறோம்.- பின்னூட்டமிட்டால் தான் உங்கள் கவிதையை ரசிக்கிறோமென்றில்லை. அப்பப்போ நேரமிருக்கிற நேரம் பின்னூட்டமிடுகிறோம் அவ்வளவு தான். அதற்காக கவிதை எழுதாமல் இருந்து விடாதீர்கள்.உங்கள் கவிதைப்பணி தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes