உன் புன்னகையின் ஒளியரும்புகள் மறையத் தொடங்கிவிட்டன பின்னலின் உட்குழிவுகளில் உதிர்ந்து தேங்கிவிட்ட ஒற்றையிதழைப் போல் சிக்கிக் கொண்டிருக்கிறது என் பிரியம் நான் வேண்டிக்கொள்கிறேன் பின்னலைத் தளர்த்துகையில் எப்போதும் போல அவற்றைப் பத்திரப்படுத்தாதே. அது இப்போது அன்பின் வாசனையையும் உயிரையும் இழந்துவிட்டது என்பதனை அறி.
நண்பர்களே அடிக்கடி அரசபடைகளின் கிபிர் விமானங்கள் குண்டு போட்டும் போடுவதாய் மிரட்டியும் கொண்டிருக்கும் போர் தொடங்குமா தொடங்காதா என்றெல்லாம் கணக்குப் போடுகிற அரசியல் தெரியாத அப்பவிச்சனங்களின் பிரதிநிதியாய் வன்னியில் இருந்து வருகிறது இந்தக்கவிதை ஒரு இனத்தின் வாழ்வு இப்படித்தான் இருந்தது.இருக்கிறது…– த.அகிலன் எங்களுடையபுன்னகையை சந்தேகிக்கும்எல்லோருக்கும் சொல்கிறோம்……. எங்கள் கடல்அழகாயிருந்ததுஎங்கள் நதியிடம்சங்கீதமிருந்ததுஎங்கள் பறவைகளிடம் கூடவிடுதலையின் பாடல்இருந்தது…..எங்கள் நிலத்தில்தான்எங்கள் வேர்கள் இருந்தன…நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம்எம்மூரில்… அவர்கள்எங்கள் கடலைத்தின்றார்கள்…அவர்கள்தான்எங்கள் நதியின் குரல்வளையைநசித்தார்கள்…அவர்கள்தான்எங்கள் பறவைகளை…
கூரையின்முகத்தில் அறையும்மழையைப்பற்றியஎந்தக்கவலையும் அற்றதுபுது வீடு இலைகளை உதிர்த்தும்காற்றைப்பற்றியும்இரவில் எங்கோகாடுகளில் அலறும்துர்ப்பறவையின் பாடலைப்பற்றியும்எது விதமான துயரமும் கிடையாதுபுது வீட்டில் ஆனாலும் என்னஅதன் பெரியயன்னல்களினூடேநுழையும்நிலவிடம்துளியும் அழகில்லை…… த.அகிலன்
காதலை பிழிந்து கவிதை ரசம் எடுக்கிறீர்கள்.
அட.. அகிலன், இப்படிக்கூட எழுதுவீங்களா? அழகா இருக்கு 🙂