நான் தேடுகிறேன். தொலைந்தது கிடைத்தபின்னும் தொடர்ந்தும் தேடுகிறேன் பொருளை அல்ல அதன் அடையாளத்தை.. எப்போதோ நான் எழுதியது நினைவுக்குள் மீளெழுகிறது. நான் எப்போதுமே இப்படி நிகழும் என்று எண்ணியதேயில்லை. எனது பால்யத்தில் இச்சையின்றித் திரும்பிய எனது வீட்டொழுங்கையைக் கடந்தும் என் கால்கள் நடந்தன. எதுவும் பழகியதாயில்லை. எல்லாம் விலகியிருந்தது. என்னைவிட்டும் தம் ஆன்மாவை விட்டும். என் பதின்ம வயது இரவுகளில் மின்சாரமற்ற தெருக்களினூடே ஏமம் சாமம் பார்க்காமல் திரிந்து விட்டு…
நெடுஞ்சாலைப் புத்தரும் சில அக்கப்போர்களும்..
புத்தர்ஒரு சுவாரசியமான கவனிக்கத்தக்க பிரகிருதி தான். அவரை எனக்கு நல்லாப் பிடிக்கும். யசோதராவை நித்திரையாக்கிப்போட்டு நைசா பின்கதவால எஸ்கேப்பாகும் போது புத்தர்நினைச்சிருப்பார்இண்டையோட இந்த அரசியலையும் அரசையும் இந்த இகலோக வாழ்வையும் நான் துறக்கிறேன் என்பதாய். ஆனால் விதி யாரை விட்டது. புத்தர்அரசியலை விட்டு அரசிலையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அதுவே பேரரசியல் ஆகிவிட்டது. இன்றைக்கு புத்தர்தான் ஆசியாவின் மிகப்பெரும் அரசியல்வாதி. அதிகாரக் குறியீடு எல்லாம். ஆனாலும் புத்தர்அறியார்அழகு பொருந்திய சாந்தம் நிரம்பிய…
படகில் நுழையாக் கடல்
அத்தனை எளிதன்று அகதியாதலும் அதனின்று விடுபடலும். நீண்ட அலைதலின் முடிவில் நதி மருங்கில் தேங்கிய துரும்பைப் போலவோ அல்லது கடல் வீசியெறிந்த தகரப் பேணியைப்போலவோ எறியப்பட்டிருக்கிறது வாழ்வு. துரும்பைத் திரும்பவும் அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின் எத்தனங்களோடிருக்கிறது உலகம். அலைதலும் தொலைதலும் எறியப்படுதலின் வலியும் துரும்பே அறியும். திடுக்கிட்டு விழிக்கும் எல்லாக்கனவுகளும் விசாரணையிலேயே தொடங்குகிறது. நான் ஓர் அகதி என்னிடமிருப்பதோ அவளைச் சேர்வதான எத்தனங்களும் விசாரணைக்கான பதில்களும் கொஞ்சக் காகிதங்களும் திரும்பவும்…