Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

வைரமுத்துவின் மறுபக்கம் ஒரு திடுக்…..!?

த.அகிலன், July 27, 2007December 1, 2009

என்னதான் புகழ் மிக்கவராக இருந்தாலும்.பாடலாசிரியர் வைரமுத்துவின் இலக்கிய முகம் என்பது சர்ச்சைகள் நிறைந்ததாகவே யிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் பின்னால் நிகழ்ந்து விட்டிருக்கின்ற அரசியல் பற்றி நிறைய விவாதங்களும் கேள்விகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில் கீற்று இணைய இதழுக்கு பேட்டி அளித்திருக்கிற திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி வைரமுத்துவின் இன்னொரு முகத்தை சத்தமில்லாமல் நாகரிகமாக தோலுரித்திருக்கிறார் இங்கே அந்த கேள்வியம் சுவாரஸ்யமான பதிலும் இங்கே.

இப்ப இருக்கிற இளம் பாடலாசிரியர்களுக்கு இடையேயான உறவு எப்படி இருக்கு? மூத்த கவிஞரான வைரமுத்துவுக்கும், உங்களை மாதிரி இளைஞர்களுக்கும் தொடர்ந்து மோதல் வந்துக்கிட்டே இருக்கே?

சினிமா ஒரு பெரிய துறை. அதில் ஒவ்வொருத்தரும் தனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டும் பண்ணிட்டும் போறாங்க. அவ்வளவு தான். இதில அவங்களோட உறவு எப்படி இருந்தால் என்ன? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க. அது அவங்களோட மன இயல்பை பொறுத்தது அவ்வளவுதான்.

வைரமுத்துவை நான் ஒரே ஒரு தடவைதான் நேரில் சந்திச்சேன். கணையாழியில் வேலை பார்த்தபோது நடந்தது அது. அப்ப என்னோட கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருந்தது. ஒரு பத்திரிகைக்காக இரண்டு பேரும் சந்திச்சோம். இலக்கியம் தொடர்பா கடுமையான விவாதங்கள் நடந்தது. அவர் சொல்ற எல்லாத்தையும் நான் கடுமையா மறுத்தேன். விவாதத்தை முடிஞ்சு, பத்திரிகைக்காரங்க போன பின்னாடி, வைரமுத்து எங்கிட்ட சொன்னார். ‘நிறையப் படிக்கறீங்கன்னு தெரியுது, உங்களோட எழுத்தும் நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க’ அப்படின்னு சொன்னார். நல்ல விஷயம் தான். அந்தச் சின்னப் பாராட்டைக்கூட மத்தவங்க முன்னாடி சொல்லாம தனியாச் சொன்னார். அதுதான் வைரமுத்து.

முழுமையான பேட்டிக்கு

எண்ணங்கள்

Post navigation

Previous post
Next post

Related Posts

மக்கள் தொலைக்காட்சி வன்னியில் இருந்து ஓர் பார்வை…

September 6, 2007December 1, 2009

தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடிமக்கள் தொலைக்காட்சி. ஈழம் வன்னியில் இருந்து – கருணாகரன் தமிழ்ச்சினிமா இல்லாமலே தமிழில் ஒரு தொலைக்கட்சி வந்திருக்கு. தமிழிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அறிவிப்பாளர்களும். அத்துடன் தமிழ் நிகழ்ச்சிகள். தமிழ் நிலப்பரப்பின் காட்சிகள். தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள். பிரந்தியப் பேச்சு மொழிகள். இப்படி தமிழ்க்காட்சியூடகங்களில் மாறுதலான ஒரு புதிய தொலைக்காட்சியாக இப்போது அறிமுகமாகியிருக்கிறது மக்கள் தொலைக்கட்சி. சினிமா இல்லாமல், சினிமாக்காரரே இல்லாமல் இந்தத்தொலைக்காட்சி வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இது…

Read More
எண்ணங்கள்

கொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு

April 17, 2018June 9, 2021

துப்பாக்கியின் கண்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு சொற்கள் ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன பீரங்கியின் வாய்களால் அச்சமூட்டப்பட்ட சொற்கள் கொண்டு செய்யப்படுகிறது ஒரு நாள்…. முடமான சொற்கள் கொண்டு கவிதைகள் செய்வது எங்ஙனம்? கால்களற்ற சொற்களைக் காணச் சகியாதொருவன் துப்பாக்கிகளறியாதொருகணத்தில் மொழியைப் புணர்ந்து புதிதாய் கால்முளைத்த சொற்களைப் பிரசவிக்கலானான்… பின் ஓர் இரவில்… துப்பாக்கியின் கண்கள் அவன் முதுகினில் நிழலெனப் படிந்து அவன் குரலுருவிப் பின் ஒரு பறவையைப்போல விரைந்து மறைந்ததாய்…..

Read More
எண்ணங்கள்

கண்ணா லட்டு தின்ன ஆசையா?

February 2, 2013April 13, 2024

சாத்திரக்காரர்கள் தலைமறைவானார்கள். சனங்களின் பெரும்பிணி சாத்திரியின் பரிகாரங்களில் தீராதென்பதை சாவு சனங்களை நெருக்கிய மலந்தோய்ந்த கடற்கரையில் பிணங்கள் மிதந்த கடனீரேரிகளில் தம்மை நோக்கி இரண்டு பக்கங்களிலிருந்தும் குறிபார்த்துக்கொண்டிருந்த துப்பாக்கிகளை அஞ்சிய இரவில் சனங்கள் கண்டுகொண்டார்கள். சனங்களோடு சனங்களாய் தப்பியோடும் அவசரத்திலும் சாத்திரக்காரர்கள் பரிகாரப் புத்தகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு மறந்திருக்கவில்லை. போகுமிடம் எப்படியோ? சூரியன் மேற்கில்தான் உதிக்குமோ? நிலவு பகலில்க் காயுமோ? போன பின்னர் பார்க்கலாம். முக்காடிட்டபடி தமக்கு முன்னர் ஓடித்…

Read More

Comments (9)

  1. த.அகிலன் says:
    July 27, 2007 at 12:52 pm

    அன்பருக்கு நன்றி

  2. தூயா [Thooya] says:
    July 27, 2007 at 5:09 pm

    shocking..

  3. Thekkikattan|தெகா says:
    July 27, 2007 at 5:33 pm

    யுகபாரதியின் கீற்று பேட்டியினை மிக்க ஆச்சர்யங்களுடன் படித்துக் கொண்டே வரும் பொழுது, “மன்மத ராசா” பாடல்ளைப் போன்று கொடுப்பதின் மூலமாக சமூக வக்கிரவங்களுக்கு துணை போவது போல இல்லையா என்பதனைப் போன்ற கேள்விக்கு அவர் கொடுத்த மற்றுமொரு வியாபாரித்தனமான நொண்டிச் சாக்குகளை படிக்க ஆரம்பித்தவுடன், மூடிவைத்து விட்டு வந்து விட்டேன்.

    இவ்வளவு பொறுப்பான முறையில் நன்கே பேட்டியளித்த அன்பர் எங்கு யாருக்காக சோடை போனார். இங்கே அவர் நினைவில் நிறுத்த வேண்டியது கவிக்கோ அப்துல் ரஹ்மானையும், மு. மேத்தா போன்றவர்களையும்…

  4. ஜீவி says:
    July 27, 2007 at 11:39 pm

    ‘வைரமுத்துவின் மறுபக்கம்- ஒரு திடுக்’ என்று குமுதம் பாணியில்
    தலைப்பைப் பார்த்ததும், நீங்கள்
    அந்த “……..இதிகாசம்” பற்றித்
    தான் குறிப்பிட்டிருக்கிறீர்களோ என்று
    திகைத்தேன்.
    நல்லவேளை, நான் நினைத்தது
    இல்லை.

  5. யோகன் பாரிஸ்(Johan-Paris) says:
    July 28, 2007 at 12:21 am

    இவரேன்றல்ல!பல பிரபலங்கள் இப்படியே!!

  6. TBCD says:
    July 28, 2007 at 3:10 am

    /*வைரமுத்துவின் மறுபக்கம் ஒரு திடுக்…..!? */
    ஒரு தொழில் முறை போட்டி என்பது வேறு…இந்த சின்ன விடயத்தை கூட பேட்டியில் சொல்லும் அளவிற்கு புதுக்கவிஞர் தாழ்ந்திருக்க வேன்டாம்…

  7. கோவி.கண்ணன் says:
    July 30, 2007 at 8:45 am

    வைரமுத்து தனியாக அழைத்துப் பாராட்டி இருக்கிறார் என்று யுகபாரதி…மகிழலாம். வைரமுத்து சொல்லாமலே சென்று இருந்தால் யுகபாரதி இந்த நிகழ்வை மனதில் வைத்திருப்பாரா என்பது சந்தேகமே !

    அவரை குறைசொல்லும் யுகபாரதி இதுபோல் நடந்து கொள்கிறாரா ? என்பது யுகபாரதிக்கு மட்டும் தான் தெரியும்.

  8. த.அகிலன் says:
    July 30, 2007 at 9:00 am

    //கோவி.கண்ணன் said…
    வைரமுத்து தனியாக அழைத்துப் பாராட்டி இருக்கிறார் என்று யுகபாரதி…மகிழலாம்.//

    ஓருவேளை பத்திரிகையாளர் முன்பு பாராட்டியிருந்தாள் இன்னும் கொஞ்சம் மகிழ்ந்திருப்பாரோ என்னமோ எதற்கும் நீங்கள் பேட்டியை முழுமையாக ஒருக்கா படித்துவிடுங்கள் கோவி கண்ணன்

  9. janakiraman says:
    July 1, 2009 at 8:05 am

    vairamuthuvai pesa enthavoru thaguthium ivaruku illai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes