Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

எங்களை மன்னித்து விடுங்கள் இனியொரு தடைவை நாங்கள் தமிழர்களாகப் பிறக்கமாட்டோம்.

த.அகிலன், June 10, 2009December 1, 2009

மஞ்சு ஒரு அழகான குட்டிப்பெண். 3 வயதில் அவளைத் தூக்கி நான் முத்தமிடும் போதெல்லாம் அவள் என் கறுப்பு நிறம் தனக்கும் ஒட்டிவிடப்போகிறது என்ற சின்னக்காவின் வார்த்தைகளை நம்பி தனது கைகளால் நான் முத்தமிட்ட கன்னத்தை அழுந்த துடைத்துக்கொள்வாள்.. அகிலன் மாமா ஆள்தான் கறுப்பு மனசுமுழுக்க வெள்ளை (நம்பலாம்) என்று அவளது கனவில் ஒரு பட்டாம் பூச்சி சொல்லிய நாளொன்றில். அவளது அகிலன் மாமா  வெள்ளையாய் மாறுவதற்காக எனக்குச் சிலமுத்தங்களும் தந்திருக்கிறாள்… அதற்குப்பிற நிறையத் தடைவை..
கடவுள் என்கிற சமாச்சாரங்களில் நம்பிக்கையில்லையெனச் சொல்லித்திரிகிற கோயிலுக்குப்போகாத நெற்றியில் திரு நீறு பூசிக்கொள்ளாத ஒரு நாளில்.. தன் அம்மாவோடு கோயிலுக்குப் போய்விட்டு வந்து என் நெற்றியில் அச்சிறுபெண் “அப்பு சாமி” என்று பெரியவர்களின் தொனியில் சொல்லியபடி திருநீற்றைப்பூசிவிடுகையில் நான் கடவுள் இருந்துவிட்டுப்போகட்டும் என்று நினைத்தேன். அந்த அழகான கைகளை அவள் இழந்துவிட்டாள் இந்தப் போர் நாசமாய்ப்போன கொடிய போர் தின்றுவிட்டது அவளது பிஞ்சுக்கைகளையும் அச்சிறுமியின் கனவுகளையும்.. தன் நான்கு வயதில் எனக்காகவும் சேர்த்து வேண்டிக்கொண்ட அந்தச்சிறுபெண்ணை ஏன் இந்தப்பாழாய்ப்போன தெய்வங்கள் கைவிட்டன?
5 வயதுச்சிறுபெண்ணுக்கு கையில்லையா? ஏன் என்கிற கேள்விகள் அபத்தமாகப்பட்டது எனக்கு.. இதுதானே நடக்கிறது.. பிறந்த குழந்தைகளே கைகளை இழக்கும் போதும் உயிரை இழக்கும் போதும்..  இது சாதாரணம் தான்.. ஆனாலும் மனசுக்குள் எதுவோ நெருடியது.. எதுவோ தொண்டைக்குள் சுழன்றாடிது.. நனைந்த கன்னங்களை துடைத்துக்கொள்கிறேன்.. இப்படித்தான் மஞ்சுக்குட்டியும் நான் முத்தமிடும்போது கன்னங்களைத் துடைத்துக்கொள்ளும்..  ஆனால் எல்லாவற்றையும் விட வேதனையானது இதுதான் மஞ்சுவுக்கு தான் எதற்காக கைகளை இழந்தோம் என்பதைப் புரிந்துகொளவியலாமல் இருப்பதுதான். அது எவ்வளவு கொடுமையான தண்டனைகள் தவறானவை சரியானவை என்பதற்கு முன்பாக அவை எதற்காக வழங்க்படுகின்றன என்ற காரணங்கள் முக்கியமானவை இல்லையா.
அம்மா வெளியே போயிருக்கிற நேரமாகப் பார்த்து அவளுக்கு தெரியாமல் சக்கரையை திருடித் தின்றுவிட்டு வாய்முழுதும் சக்கரை அப்பியிருக்க அம்மா வந்ததும் கேப்பாள் சக்கரை எடுத்து சாப்பிடனியளோ கண்களால் சிரித்தபடி இல்லையே என்று சொல்லும் குழந்தைக்கு தண்டனையாய் அம்மா  முத்தங்களைத்தான் பரிசளிப்பாள். அம்மா மட்டுமென்ன குழந்தைகளைப் நேசிக்கிற எவனாலும் அந்தத் தண்டனையைத்தான் அவற்றுக்கு தரமுடியும்.செய்த தவறுக்கே தண்டனைகள் இனிக்கிற குழந்தைகளில் உலகில் செய்யாத தவறுகளுக்கான தண்டனைகள் வலிப்பதில் என்ன நியாயம் இருக்கமுடியம்.
ஆனால் தான் எதற்காக குண்டுகளால் தாக்கப்படுகிறோம் என்கிற காரணங்களை அறிந்து கொள்ளாமலேயே அவள் தண்டனை பெறுகிறாள். செத்துப்போகிறாள்..அவயவங்களை இழக்கிறாள்.

HOTEL RWANDA படத்தில் ஒரு காட்சி வரும் ஒரு செஞ்சிலுவைச் சங்க பெண் அதிகாகரி சொல்லுவாள். நான் நிறைய அனாதைக் குழந்தைகளைச் சந்தித்தேன் அந்தக் குழந்தைகள் சொல்லின “தயவு செய்து அவர்கள் எங்களைக் கொல்லவேண்டாம் என்று சொல்லுங்கள்  சத்தியமாக இனியொரு தடைவை நான் துசி இனமாகப் பிறக்கமாட்டேன்” (Please don’t let them kill me. i promise I won’t be tutsi any more) அந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரி இப்படிச் சொல்லியபடி அழுவாள்.
வன்னியிலும் குழந்தைகள் அப்படித்தான் சொல்லியழும். “தயவு செய்து எங்களை இந்தமுறை மன்னித்து விடுங்கள் இனியொரு தடைவை நாங்கள் தமிழர்களாகப் பிறக்கமாட்டோம்” இந்தக் குரல் போர் நடத்துகிற எந்தத் தரப்புக்குமே கேட்பதில்லை. வெற்றிகளின் போது போரையும் தோல்விகளின் போது போர் நிறுத்தத்தையும் கோருகிற. கிரிக்கெட் ஸ்கோரைப்போல போரில் இருந்து உதிருகிற எண்ணிக்கைகளையும் எதிர்கொள்கிற தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பத்திரமாக வெளிகளில் வைத்துக்கொண்டிருக்கிற எந்த……………… டிக்கும் இந்த அழுகுரல் ஒரு பிரச்சினையில்லை.
பதுங்குகுழிகளில் இருந்து
சிலந்திகள் வெளியேறிய அன்றைக்கு..
குழந்தைகள் சம்மணமிட்டு அமர்வதை மறந்தார்கள்..
(சிலந்திகள் வெளியேறிய பதுங்குகுழிகள்)

குழந்தைகள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கின்றன. பால்யத்தில் துப்பாக்கிகளைக் கண்டு அஞ்சவும் சில பொழுதுகளில் அவற்றைச் சுமக்கவும் நிர்;பந்திக்கப்படுகிறார்கள் குழந்தைகள். போர் குழந்தைகளைத் தின்றுகொண்டிருக்கிறது. பல்வேறு வழிகளிலும் காலத்தால் திருப்பித்தரமுடியாத பால்யத்தின் ஆனந்தத்தை குழந்தைகள் இழக்கிறார்கள். அச்சமுற்றும் தயங்கியும் தமக்குள் உள்ளொடுங்கியவர்களாகவும் அவர்கள்மாறிப்போகிறார்கள்.
தமிழனாகப் பிறந்ததற்காக வன்னியில் இருக்கிற ஒருவன் சாகலாம் சாகவேண்டும் அப்படி சாகாவிட்டால் (பத்திரமான வெளிகளில் தங்கியிருக்கிற எங்கள் மானம் என்னாவது) ஆனால் ஒரு குழந்தை தான் எதற்காகத்  சாகிறோம் என்கிற காரணம் தெரிந்துகொண்டு சாவது மேலானது இல்லையா அந்த வாய்ப்பை குழந்தைகளிற்கு வழங்கவேண்டும் நண்பர்களே?

எண்ணங்கள்

Post navigation

Previous post
Next post

Related Posts

தாயாய்; ,சகோதரியாய், தோழியாய்….

August 26, 2006December 1, 2009

நான் அண்மையில் இலங்கை வன்னியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்குப் போயிருந்தேன் அந்தஅனுபவங்களை ஒரு குறிப்பாக எழுதியிருக்கிறேன் – த அகிலன் “குழந்தைகள் நாம் குழந்தைகள் நாம்அண்ணனின் அன்பு குழந்தைகள் நாம்”என்று ஆடிப்பாடுகிற சிறுவர்கள் எல்லோரும் 3-12வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் மழலைமுகம்மாறாது இன்னமும் இருக்கின்ற தமிழ்மண்ணின் புன்னகைகள்.ஆனாலும் அவர்கள் வயது களையும்முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிற புன்னகைகளையும் மீறி துருத்திக்கொண்டிருக்கிற ஏக்கமும்துயரமும். மனசின் ஆழங்களை ஊடுருவி நெருமாமலில்லை. ஏதோ ஒரு விதத்தில் போர்…

Read More
எண்ணங்கள்

கொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு

April 17, 2018June 9, 2021

துப்பாக்கியின் கண்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு சொற்கள் ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன பீரங்கியின் வாய்களால் அச்சமூட்டப்பட்ட சொற்கள் கொண்டு செய்யப்படுகிறது ஒரு நாள்…. முடமான சொற்கள் கொண்டு கவிதைகள் செய்வது எங்ஙனம்? கால்களற்ற சொற்களைக் காணச் சகியாதொருவன் துப்பாக்கிகளறியாதொருகணத்தில் மொழியைப் புணர்ந்து புதிதாய் கால்முளைத்த சொற்களைப் பிரசவிக்கலானான்… பின் ஓர் இரவில்… துப்பாக்கியின் கண்கள் அவன் முதுகினில் நிழலெனப் படிந்து அவன் குரலுருவிப் பின் ஒரு பறவையைப்போல விரைந்து மறைந்ததாய்…..

Read More

காத்திருப்பொன்றின் முடிவு(ஒரு அஞ்சலி)

December 13, 2006December 1, 2009

ஈழத்துக்கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றிய நினைவுப்பகிர்வு நான் அவரை சுமார் நான்கு வருடங்களிற்கு முன்பாக ஒரு மழைக்கால காலைப் பொழுதில் சந்தித்தேன். இவர்தான் கவிஞர் வில்வரத்தினம் என நிலாந்தன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் . இவர் அகிலன் கவிதைகள் எழுதுவார் என்று அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு ஞாபகமிருக்கிறது நான் உடனே யார் சுனா.வில்வரத்தினமா என்று கேட்டேன். சுனா கொஞ்சம் அழுத்தமாக இருந்தது கேள்வியில் சு.வி…

Read More

Comments (24)

  1. கனகசபை says:
    February 3, 2009 at 10:01 am

    🙂

  2. கமல் says:
    February 3, 2009 at 8:36 pm

    உதாரப்பா கனகசபை?? நாட்டு நடப்பே தெரியாமல் இருக்கிற மனுசன்?

  3. ila says:
    February 3, 2009 at 11:38 pm

    🙁
    கண்ணீர் துளியுடன் இளா

  4. Anonymous says:
    February 3, 2009 at 11:53 pm

    புலிகள் ஆயுதத்தை கீழ போட்டுட்டு உலக நாடுகளிடம் உயிருக்கு உத்திரவாதம் கேக்கவேண்டும்.

  5. Anonymous says:
    February 4, 2009 at 5:00 am

    romba manasukku kastama irukku

  6. கனகசபை says:
    February 4, 2009 at 5:49 am

    மனசுக்கு கஸ்டம் எண்டதையே நேர வந்து சொல்ல உமக்கு கஸ்டம்.. ம்..

  7. கனகசபை says:
    February 4, 2009 at 5:51 am

    //உதாரப்பா கனகசபை?? நாட்டு நடப்பே தெரியாமல் இருக்கிற மனுசன்//
    ஓம் ஓம் நிர் எழுதற நாட்டு நடப்புகளையும் பாத்தண்டுதான் இருக்கிறன்

  8. தமிழன்-கறுப்பி... says:
    February 7, 2009 at 6:21 pm

    யுத்தம் கொடுக்கிற வலிகளை யாரும் கவனிப்பதேயில்லை அகிலன் அது போதும் போதும் எறன்றாகி விட்ட பின்னரும் தீர்வைக்காண்கிறார்கள் இல்லையே…

  9. குருபரன் says:
    February 10, 2009 at 7:34 am

    கொசோவாவில் குண்டு துளைத்து குழந்தை செத்தாலும் காசாவில் குண்டு துளைத்து குழந்தை செத்தாலும் ஏன் குழந்தைக்கு பெத்ததுகள் அடித்தாலுமே சர்வதேசத்தில் சட்டமுண்டு… எல்லாரும் கேட்பார்கள்.. கூக்குரலிடுவார்கள்… நாமென்ன செய்வது?? 8கோடி தமிழினமிருந்தும் என்னதான் நடந்தது???? குற்றுயிரும் குடல் வெளியிலுமாய் சிதறிக்கிடக்குதுகள் எம் சிறுசுகள்…

    என்ன கவலையென்றால் எண்ணிக்கையில் எம்மைவிட மிகக் குறைவேயான கொசோவாவை காக்க ஜ.நா கூட படையனுப்பியது..ஆனால் ஜயோ எமைகொல்லாதீர் என எம் உறவுகள் தமிழகத்தின் 7 கோடி தமிழர்கள் கத்தியும் இந்தியா படையனுப்பி கொல்லுது…

    இந்த பிணவெறி பிடித்த அரசியல் தலைவர்கள் தம் அவயங்கள் இழந்து அணுவணுவாய் சாகவேண்டும்… அந்த குழந்தைகளின் அலறலில் இவர்கள் ஊனமாக வேண்டும்…..
    கடவுளே நீ உண்மையென்றால் பிணவெறியர்களிடமிருந்து எம் குழந்தைகளையாவது காப்பாற்று..

  10. geetha says:
    February 12, 2009 at 12:57 pm

    my heart is aching.enathu azhukai nitkum naalai ethirparkiren.im praying god.

  11. செந்தழல் ரவி says:
    February 14, 2009 at 3:05 pm

    மனது கனத்துவிட்டது…

    செந்தழல் ரவி

  12. Surya says:
    February 17, 2009 at 9:57 pm

    இதைவிட கொடுமை எவர்க்கும் இல்லை. வேதனையிலும் வேதனை.

  13. Thooya says:
    February 19, 2009 at 2:06 am

    🙁 வார்த்தைகள் வரவில்லை எழுத…

  14. mathu says:
    February 27, 2009 at 8:17 pm

    எண்ணிப்பார்க்க முடியா கொடுமைகளினை நயமான வரிகளில் தரும் போது கூட இரசிக்க முடியவில்லை கண்ணீர்தான் முட்டுகிறது…அருமை.

  15. nTamil says:
    March 3, 2009 at 9:40 am

    Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

    இதுவரை இந்த http://www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    nTamil குழுவிநர்

  16. லோஷன் says:
    March 26, 2009 at 7:08 am

    வார்த்தைகளின் கனதியும்,உண்மைகளின் உறைப்பும் மனதை சோகமாக்கி விட்டது..
    இதனால் தான் அடிக்கடி எம் இலங்கைத் தமிழரைப் பற்றி ‘சபிக்கப்பட்ட இனம்’ என்று சொல்கிறேன்..

  17. டி.அருள் எழிலன். says:
    March 26, 2009 at 7:58 am

    பசி, பைத்தியம், தனிமை, மரியாதை எல்லாவற்றையும் யுத்தம் பறித்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களாகவே நிம்மதியாக வாழ முடியவில்லை, கண்களை இறுக்க மூடவும் முடியவில்லை. புலிகளுக்காக பேசுகிறேன் என் நினைக்க வேண்டாம். இந்த யுத்தத்தில் புலிகளின் பின்னடைவை ஒரு வாய்ப்பாக பயன் படுத்தி மக்களின் மரணங்களை ஒரு பொருட்டாகவே நினைககமல் இந்தியாவின் துணையோடு அங்கு இன அளிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படுகொலைகள் ஈழத் தம்ழீனத்தையே அழித்து விடுமோ என்று தோன்றுகிறது. ஒரு பக்கம் புலம்புவவைத் தவிற என்ன செய்வதென்று தெரியாத சூழலில் மனதின் எங்க்கோ ஒரு ஓரத்தில் பழிவாங்குக் உணர்ச்சியும் எழுந்து வருகிறது.ஆமாம் அகிலன் இந்தியாதான் உங்களைக் கொன்ரு கொண்டிருக்கிரது.

  18. Theera says:
    April 13, 2009 at 9:46 pm

    இது உங்க அனுபவமா கற்பனையா தெரியலை… இதன் உண்மைத்தன்னையும் உறுதியில்லை…

    ஆனால்….
    தமிழராய் பிறப்பது குற்றம்…
    வடக்கு கிழக்கில் பிறப்பது அதிலும் குற்றம்….
    அந்த மண்ணில் வாழ்ந்தாலும் குற்றம் ….
    அங்கிருந்து வெளியேறி இலங்கையின் வேறு பாகங்களில் வாழ்வது அதிலும் குற்றம்…
    அடிமையாக வாழாதது குற்றம்…
    வாய் திறப்பது குற்றம்…
    ஊமைகளாக .. அடித்தாலும் கொன்றாலும் மெளனமாய் சாவதே சரியான வழி!!!

  19. anjalin says:
    April 14, 2009 at 9:57 pm

    its toch my heart so badly all this year i don’t know whats going on in Jaffa. Its so sad but i belive one day we will have our freedom.

  20. Theera says:
    April 22, 2009 at 8:57 pm

    இதயத்தை தொடுவது போல் பேசுவது மட்டும்தான் நம்மால் செய்ய முடிந்த ஒரே விடயம்!!! அதைப் கார்த்து வருத்தப்படுவதுதான் உங்களால் செய்ய முடியும்!!! இந்த இரண்டையும் விட மூன்றாவதாக ஒரு வழியுள்ளது….

    அது அகிம்சைப் போராட்டம் என்றோ…. தீக்குளிப்பென்றோ நம்மை நாமே அழித்துக் கொள்வது…

    எதிரியின் கையில் அகப்பட்டு சின்னாபின்னமாகாமல் செத்து விடலாம்!!!

    சுதந்திரம் என்ந கனவு இருந்தால் அதை அடியோடு அழித்துவிடுவதுதான் இனி உங்களுக்கு நல்லது;
    நம்பி ஏமாறத் தேவையில்லையே!!!

  21. லக்கிலுக் says:
    April 23, 2009 at 7:07 am

    🙁

  22. theera says:
    May 2, 2009 at 9:16 pm

    ஈழத்துப் பாப்பா பாடல்

    ஓடி மறைந்துகொள் பாப்பா – நீ
    ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
    பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா – நீ
    பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

    சிங்களப் படைகள்வரும் பாப்பா – வானில்
    சீறும் விமானம்வரும் பாப்பா
    எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் – மனிதர்
    எவரும் இல்லையடி பாப்பா

    சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா – எம்மை
    இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
    வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
    மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

    பகைவனுக்கு வேண்டியது சண்டை – அவன்
    வகைவகையாய் வீசினான் குண்டை
    புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் – பார்த்து
    நகைக்கிறான் எதிரி பாப்பா

    தெய்வமும் மறந்ததடி பாப்பா – வெறி
    நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
    பொய்யும் வெல்லுதடி பாப்பா – இன்று
    பேய்களின் ஆட்சியடி பாப்பா

    யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா – குண்டின்
    சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
    இரத்ததில் தோய்கிறோம் பாப்பா – நாம்
    மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

    காக்கை குருவிஎங்கள் ஜாதி – இவற்றோடு
    காட்டில் வாழ்கிறோம் பாப்பா
    தேளும் பாம்பும் புடைசூழ – நாம்
    நாளும் வாழ்கிறோம் பாப்பா
    தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா – நம்
    தலைவிதி இதுதான் பாப்பா

  23. சுபோ says:
    June 11, 2009 at 6:27 am

    பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசிஸில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகை அணியக்கூடாது என்று ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்ட போது பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அந்த ஆணையை உடனடியாக இரத்து செய்யவேண்டுமென்று கோரிக்கை வைத்தாராம். ம்… அதில் என்ன தப்பு இருக்குதப்பா? ஒரு தலைவன் தன் இனத்துக்கொரு பிரச்சனையென்றவுடன் தலையிட்டானே! அது அவன் கடமை. ஆறு கோடி தமிழர்களுக்கும் சீ சீ உலகத்தமிழர்க்கே தலைவன் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் இருக்கிறாரே அவரை போலவா இருக்க வேண்டும். தயவு செய்து இனியாவது இந்திய அரசையோ சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தமிழின அழிப்பிற்கு உடந்தையாக இருந்த வேற்றின அரசாங்கங்களை குற்றஞ்சொல்ல முற்படாதீர்கள். நமக்கு நாம் தான் எதிரி. துரோகங்கள், சுயநலம், அப்பப்பா தாங்க முடியலடா சாமி! இளிவுகெட்ட நம்மினத்திற்கு கிடைத்த சாபமே தவிர எதிரியின் நாசமல்ல.

  24. I Make Thousands of Dollars a Month Posting Links on Google from Home says:
    June 13, 2009 at 1:12 am

    Hey, great post, very well written. You should write more about this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2026 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes