பிரிவின் சித்திரம் த.அகிலன், October 5, 2006December 1, 2009 எனக்கும்உனக்குமான இடைவெளிபிரிவின் சொற்களால் நிரம்புகிறது… உதிர்ந்து விழும்நட்சத்திரத்தின் பேரோசைபிரிவின் காலடியில்மௌனித்து வீழ்கிறது. தாகித்தலையும்நதியின் தடங்களில்நான் வரைந்து கொண்டிருக்கிறேன்…நம் பிரிவின் சித்திரத்தை.. த.அகிலன் கவிதைகள்
நிர்ப்பந்தம் October 7, 2006December 1, 2009 அலைகிறது மனசுஅப்படியேஸ்தம்பித்துப்போனவாழ்வின் நினைவெழுந்துமனவெளியெங்கும் அலைகிறது.. நிலவின் பின்னழகு போலவேநிதர்சனங்களும்விழிகளுக்கு தெரியாமலே…. முகங்களின் கொந்தளிப்பில்மூடிவைக்கப்படுகின்றன மனசுகள்… வாநானும் நீயும்திறந்த மனசோடுகாற்றைப்போல்எங்கும் நுழைவோம்.. எனக்கு நானும்உனக்கு நீயும்எல்லைகள் வகுத்துக்கொண்டுவறண்டுபோகாமல்எனக்கு உன்னையம்உனக்கு என்னையும்முழுவதும் காட்டுகிறவரைஇருட்டுக்குள் இருக்கிறநம் வாழ்க்கை இருட்டுக்குள்ளேயேஇருக்க நிர்ப்பந்திக்கப்படுவதாய்…. த.அகிலன் Read More
வன்முறை.. June 29, 2006December 1, 2009 அன்பேகாற்றில் நழுவவிடும்உன் வார்த்தைகளில் கத்திகள்வைத்தல்எங்கனம் சாத்தியமாகிறது… த.அகிலன் Read More
உதிர்ந்து கொண்டிருக்கும் நான்.. October 24, 2006December 1, 2009 உன்கொலுசின் அசைவுகளில்நான் உதிந்து கொண்டிருக்கிறென்… உதடுவரை வந்துஉள்ளடங்கிப்போகும்உனக்கான ஒரு சொல்…எனை தின்றுவிட்டுப்போகட்டும். நான்ஏங்கிக்கொண்டிருக்கிறேன்… நடுக்கடலில்கப்பலினின்றும்உதிர்ந்த காலி மதுப்புட்டியைப்போலஉன்மனசின் ஆழங்களுக்குள்போய்விடமாட்டேனா? த.அகிலன் Read More