Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

அகிலனும் ஆனந்தவிகடனும்…

த.அகிலன், December 29, 2008December 1, 2009

01.

அப்பா இன்றைக்கும் கனவில் வந்தார்
நினைவுக்குள் மிதக்கிற
சிகரட் முத்தமும்
சாராயம் நெடிக்கிற
கச்சான் அல்வா உருண்டையும்
இன்றைக்கும் அவரிடமிருந்தது…
தாடிமொய்த்த அவர் கன்னத்துக்கு
நான் அளிக்கும் முத்தத்தின் விலையாய்
கச்சான் அல்வாவைச் சொல்கிறார்…
எப்போதும் அவர்
இப்படித்தான் வருகிறார்..
நான் வளர்ந்ததை அப்பா அறியாரா
இல்லை வளர்ந்த பின்னான அப்பாவை
என் கனவுக்குத் தெரியாதா
பத்தொன்பது வருடங்கள்
கழிந்துவிட்டதென்றும்
என் முத்தங்களிற்கான
காரணங்களும்
அர்த்தங்களும் மாறிப்போயின என்பதையும்
அவருக்குச் சொல்வதாய்
தீர்மானித்த அன்றைக்கு உணர்ந்தேன்
அப்பாவரும் கனவுக்காய்
காத்துக்கிடக்கிற
குட்டிப்பையன் ஒருவன்
எனக்குள் ஒளிந்து கொண்டிருப்பதை

02.

பிரியத்தின்
சொற்கள் வற்றிக்கொண்டிருந்தன.

தாகித்தலையும்
நம்
இறுதிப்பார்வைகள்
நதியைப்போல்
ஓடிக்கொண்டிருக்கிறது
நமக்கிடையே

பற்றியிருந்த
விரல்கள்
இளகத்தொடங்குகையில்

வானம்
குமுறத்தொடங்கியிருந்தது

இருவரும்
கண்கள்
ஏன் முதுகுகளிடம்
இல்லை என்பதாய்
நடக்கத்தொடங்கினோம்

சுவடுகளைக்
கரைத்தபடி
பெய்து கொண்டிருந்தது
மழை.

26.12.2008 ஆனந்த விடனில் வெளியான எனது இரண்டு கவிதைகள்.

நன்றி:ஆனந்தவிகடன்

கவிதைகள்

Post navigation

Previous post
Next post

Related Posts

கவிதைகள்

படகில் நுழையாக் கடல்

April 21, 2010April 13, 2024

அத்தனை எளிதன்று அகதியாதலும் அதனின்று விடுபடலும். நீண்ட அலைதலின் முடிவில் நதி மருங்கில் தேங்கிய துரும்பைப் போலவோ அல்லது கடல் வீசியெறிந்த தகரப் பேணியைப்போலவோ எறியப்பட்டிருக்கிறது வாழ்வு. துரும்பைத் திரும்பவும் அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின் எத்தனங்களோடிருக்கிறது உலகம். அலைதலும் தொலைதலும் எறியப்படுதலின் வலியும் துரும்பே அறியும். திடுக்கிட்டு விழிக்கும் எல்லாக்கனவுகளும் விசாரணையிலேயே தொடங்குகிறது. நான் ஓர் அகதி என்னிடமிருப்பதோ அவளைச் சேர்வதான எத்தனங்களும் விசாரணைக்கான பதில்களும் கொஞ்சக் காகிதங்களும் திரும்பவும்…

Read More

காத்திருப்பின் வலி

June 9, 2006December 1, 2009

காத்திருப்பின் வலிமரமொன்றின்கிளையிருந்து உதிர்கிறது நம்பிரிவின்முதற்கணத்தில்நீசிந்திப்போனபுன்னகையும்பார்வைகளும்ஓர்ஓவியமாய்உறைந்துபோனது, கிழிபடாதநாட்காட்டியின்துயரம்போலத்தொலைகிறதுஎன் காதல். ஆனாலும்பெண்ணேநம்சிலிர்த்துப்போனநினைவுகளின் கணங்கள் மட்டுமேபோதுமானவைஎன் காத்திருப்புக்கு.. த.அகிலன்

Read More

எறும்புகள் உடைத்த கற்கள்

September 4, 2006December 1, 2009

வலிஉணரும் தருணங்களில்எங்கிருந்தோ முளைக்கிறதுஎனக்கான கவிதை காற்றழிந்த மணல்வெளியில்காத்திருக்கும்என்காலடிகாற்றில் அழிவதற்காய் நான்கானலைஅருந்த தயாராகையில்எப்படியாவது காப்பாற்றிவிடுகிறது மேகம் எனக்குத் தெரியும்கடித்துவிடுகிறகடைசிநொடி வரைக்குமேபுகழப்படும் எறும்புகள் ஆனாலும்எறும்புகளிற்குகவலைகிடையாஎதைக்குறித்தும் என்வழியெங்கும்நிறுவிக்கிடக்கிறதுஎறும்புகள் உடைத்தகற்கள் த.அகிலன்

Read More

Comments (24)

  1. கோசலன் says:
    December 29, 2008 at 9:02 am

    வாழ்த்துக்கள் அகிலன்…

  2. aruna says:
    December 29, 2008 at 9:40 am

    வாழ்த்துக்கள் அகிலன்..
    அன்புடன் அருணா

  3. அறிவன் says:
    December 29, 2008 at 9:42 am

    >>குட்டிப்பையன் ஒருவன்
    எனக்குள் ஒழிந்து கொண்டிருப்பதை>>

    ஒளிந்து கொண்டிருப்பதை என எழுத எண்ணினீர்களா?

  4. த.அகிலன் says:
    December 29, 2008 at 9:47 am

    ஆமாம்.. அறிவன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.. திருத்தியாகிவிட்டது..

  5. Anonymous says:
    December 29, 2008 at 10:56 am

    //அப்பாவரும் கனவுக்காய்
    காத்துக்கிடக்கிற
    குட்டிப்பையன் ஒருவன்
    எனக்குள் ஒளிந்து கொண்டிருப்பதை//

    நானும் குட்டிப்பையனாய் தினமும்……………

  6. பிரேம்குமார் says:
    December 29, 2008 at 5:27 pm

    வாழ்த்துக்கள் அகிலன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது 🙂

  7. தங்கராசா ஜீவராஜ் says:
    December 29, 2008 at 6:26 pm

    வாழ்த்துக்கள் அகிலன்…

  8. kanesananth says:
    December 29, 2008 at 7:12 pm

    nalla erukuda……….

  9. சாத்திரி says:
    December 29, 2008 at 8:15 pm

    வாழ்த்துக்கள் அகிலன் உங்கள் படைப்புக்களை ஒரு பேப்பரிலும் படித்து இரசித்திருக்கிறேன்.

  10. ஜமால் A M says:
    December 31, 2008 at 8:33 am

    வாழ்த்துக்கள் …

  11. கமல் says:
    January 1, 2009 at 12:21 pm

    இருவரும்
    கண்கள்
    ஏன் முதுகுகளிடம்
    இல்லை என்பதாய்
    நடக்கத்தொடங்கினோம்//

    அகிலன் கவிதையில் அணிகள் கரை புரண்டோடுகின்றன… இனிய இளகிய மொழி நடை… தொடருங்கள்… ஏக்கமும், எதிர்பார்ப்பும். பிரிவும் கலந்ததாய் கவிதகள் மனதை வருடுகின்றன….

  12. சாந்தி says:
    January 1, 2009 at 2:24 pm

    அகிலனனி் கனவுகள் என்றாலே அது தென்றலில் மிதப்பது போன்றதொரு உணர்வைத் தரும். அதுபோல இக்கவிதைகளும்.

    வாழ்த்துக்கள் அகிலன்.

    சாந்தி

  13. king... says:
    January 1, 2009 at 4:07 pm

    மிகத்தாமதமான அங்கீகாரம்தான்…

    வாழ்த்துக்கள் அகிலன்…

  14. ப.அருள்நேசன் says:
    January 5, 2009 at 11:45 am

    //அப்பாவரும் கனவுக்காய்
    காத்துக்கிடக்கிற
    குட்டிப்பையன் ஒருவன்
    எனக்குள் ஒளிந்து கொண்டிருப்பதை//
    Very good
    நல்ல அருமயான கவிதை வாழ்த்துக்கள் அகிலன்

  15. Akila says:
    January 6, 2009 at 8:19 am

    பிரியத்தின்
    சொற்கள் வற்றிக்கொண்டிருந்தன.

    தாகித்தலையும்
    நம்
    இறுதிப்பார்வைகள்
    நதியைப்போல்
    ஓடிக்கொண்டிருக்கிறது
    நமக்கிடையே

    பற்றியிருந்த
    விரல்கள்
    இளகத்தொடங்குகையில்

    வானம்
    குமுறத்தொடங்கியிருந்தது

    இருவரும்
    கண்கள்
    ஏன் முதுகுகளிடம்
    இல்லை என்பதாய்
    நடக்கத்தொடங்கினோம்

    சுவடுகளைக்
    கரைத்தபடி
    பெய்து கொண்டிருந்தது
    மழை.

    arputhamaan varigal…..

    varthaikal illai paarata

  16. தபோதரன் says:
    January 7, 2009 at 5:46 pm

    நரைமயிர்கள் சற்றே தெரியத் தொடங்கிவிட்ட போதிலும் (எனக்கு),
    இன்னமும் அப்பாவின் விரல் பிடித்து நடந்த நாட்களையும்,
    ஆர்வமுடன் அவர் சொல்லும் விடயங்களைக் கேட்டதுவும்,
    இன்னனமும் நினைவில் வர,
    நெஞ்சம் விம்மும் குட்டிப் பையன்(கள்),
    இங்குமுண்டு.

  17. சோமி says:
    January 29, 2009 at 6:08 am

    வாழ்த்துக்கள் அகிலன்.

  18. vijay says:
    February 2, 2009 at 3:26 pm

    உனது படைப்புக்கள் அதிகம் வெளிவரவேண்டும்

  19. Loshan says:
    March 2, 2009 at 9:44 am

    வாழ்த்துக்கள் அகிலன்.
    எங்களுக்குப் பெருமையும் மகிழ்ச்சியும்..

    உங்கள் எழுத்துக்களின் வலிமையும்,செறிவும் ரொம்பவே பிடித்திருக்கிறது..

  20. Kavi says:
    June 7, 2009 at 3:38 pm

    உங்கள் படைப்புக்கள் அருமை..

  21. seelan says:
    July 6, 2009 at 12:36 pm

    nalla irrukkada

  22. thaya says:
    August 25, 2009 at 7:50 am

    very very good. best of luck

  23. varma says:
    September 2, 2009 at 10:13 am

    excellent!

  24. thaya says:
    September 2, 2009 at 10:15 am

    touch wood!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes