Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

மன்மதராசாவுக்கு கல்யாணம்..

த.அகிலன், November 24, 2008December 1, 2009

 

தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.
இப்படித் தன்னுடைய வருங்கால மனைவிக்காக கவிதை எழுதியிருந்தார் யுகபாரதி. கடைசியில் அவரது தேடல் முடிந்து கல்யாணமுமாடியிச்சு.. காதல் பிசாசு என்றெல்லாம் பாட்டெழுதியிருக்கிறீர்கள். காதலில் சிக்கியதேயில்லை என்று பொய்தானே சொல்கிறீர்கள்.. நான் யுகபாரதியோடு நெருக்கமான ஆரம்பநாட்களில் இரண்டு மூன்று முறை இந்தக்கேள்வியை கேட்டிருப்பேன். அவர் மறுத்துக்கொண்டேயிருந்திருக்கிறார்.. இனிமேல் மறுக்கவே முடியாது அதான் இன்னிக்கு கல்யாணமாயிடிச்சில்ல.. (சிக்கிட்டாருல்ல இனிமே காதலிச்சே ஆகணும்)  
(யுகபாரதி -அன்புச்செல்வி)
திரைப்பட பாடலாசிரியர்,கவிஞர் யுகபாரதிக்கும் அன்புச்செல்விக்கும் 23.11.2008 தஞ்சையில் கல்யாணம் நடந்தது. அவரை ஒரு வானொலிக்காக பேட்டி எடுக்கப்போன என்னை தன் தம்பியாக அரவணைத்து அன்பு செய்யும்(அவரைப்பற்றி எழுத நிறைய உண்டு. வாழ்த்தும்போது எதுக்கு வழவழாவென்று அதான் சுருக்கமாய்.) அந்த இனிய அண்ணனுக்கும் அவரோடு இல்வாழ்வைத்தொடங்கும் அன்புச்செல்விக்கும் இந்த இனிய நாளில் யுகபாரதி அன்புச்செல்வி தம்பதி எல்லாவளங்களும் பெற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்..
நிறையப்பிரியமுடன்
த.அகிலன்
மன்மதராசா பாட்டு இவுரு எழுதினதுதானே அதான் தலைப்பு இப்படி..ஹி ஹி ஹி 
எண்ணங்கள்

Post navigation

Previous post
Next post

Related Posts

இலியானாவும் இன்னும் சில பிகர்களும்..

December 2, 2008December 1, 2009

பொதுவாக காஸ் குக்கருக்கு மருமகள்களுக்குத்தான் பயம் வரவேண்டும்.. ஆனால் எங்கட வீட்டில் மாமிக்கு பயம் வந்திருக்கிறது. நானும் கடந்த இருபது நாளாக காலமை எழும்பினோண்ண முதல் வேலை அடுப்பு மூட்டுறது.. நீங்கள் யாரவது உங்கட வீட்டில விறகடுப்பு மூட்டியிருக்கிறியளோ.. அது ஒரு தனிக்கலை.. என்னைக்கேட்டால் நான். அதை 65 வது கலையாக சேர்க்கச் சொல்லி சிபாரிசே செய்வன்.. சமையல் கலையுக்குள்ள கடைசி வந்தும் இதைச் சேக்கமுடியாது.. ஆனா இங்க நான்…

Read More

ஆஸ்பத்திரி ராணிகள்…..

May 13, 2008December 1, 2009

அந்த வேதனையிலும் எனக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. பின்ன நாலு நளா கோல்ட் ஆக்ட்,சமஹன்,பனடோல்,ஆக்சன் 500 எண்டு முயற்சி செய்து செய்து தோத்துப்போய் ஆஸ்பத்திரிக்குப்போனா. போன உடனேயே ஒரு நர்சம்மா வாயில தெர்மா மீட்டரை செருகி உடைஞ்சா 100 ரூபாய் எண்டு சொன்னா சிரிப்பு வருமா வராதா? ஒரு வேளை நோயால் துவண்டு போயிருக்கும் நோயாளிகளை கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் அவா இந்த விசயத்தை சொல்லியிருப்பாவோ? என்னவோ? ஆழ்வார்ப் பேட்டை…

Read More

வைரமுத்துவின் மறுபக்கம் ஒரு திடுக்…..!?

July 27, 2007December 1, 2009

என்னதான் புகழ் மிக்கவராக இருந்தாலும்.பாடலாசிரியர் வைரமுத்துவின் இலக்கிய முகம் என்பது சர்ச்சைகள் நிறைந்ததாகவே யிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் பின்னால் நிகழ்ந்து விட்டிருக்கின்ற அரசியல் பற்றி நிறைய விவாதங்களும் கேள்விகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் கீற்று இணைய இதழுக்கு பேட்டி அளித்திருக்கிற திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி வைரமுத்துவின் இன்னொரு முகத்தை சத்தமில்லாமல் நாகரிகமாக தோலுரித்திருக்கிறார் இங்கே அந்த கேள்வியம் சுவாரஸ்யமான பதிலும் இங்கே. இப்ப இருக்கிற இளம் பாடலாசிரியர்களுக்கு…

Read More

Comments (10)

  1. தமிழன் - கறுப்பி... says:
    November 24, 2008 at 8:31 am

    நிறைவான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்…:)

  2. Jamal A M says:
    November 24, 2008 at 8:41 am

    வாழ்த்துக்கள் யுக பாரதி

  3. மெல்போர்ன் கமல் says:
    November 24, 2008 at 12:33 pm

    ஒரே ஒரு கோரிக்கைதான்
    உன்னிடம் வைப்பதற்கு
    வேலைக்குக் கிளம்பும்போது
    அழுவதைத் தவிர்க்க வேண்டும்
    வெறுங்கையோடு திரும்பி வந்தால்
    வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.

    இது உங்கள் மனைவிக்கும் நீங்கள் கூறுவது போல் அமைகிறது அல்லவா. ம்….ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். மிகவும் அருமை அண்ணாடும்.

  4. பிரேம்குமார் says:
    November 24, 2008 at 5:23 pm

    எளிமையான, அருமையான கவிதை 🙂
    வாழ்த்துக்கள் கவிஞர் யுகபாரதிக்கு

  5. Saravana Kumar MSK says:
    November 24, 2008 at 10:17 pm

    அழகான கவிதையை எழுதி இருக்கிறார்..

  6. Saravana Kumar MSK says:
    November 24, 2008 at 10:17 pm

    தம்பதிகளுக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. 🙂

  7. Saravana Kumar MSK says:
    November 24, 2008 at 10:18 pm

    அகிலன்.. உங்களுக்கு எப்போ கல்யாணம்??
    😉

  8. சயந்தன் says:
    December 5, 2008 at 10:39 am

    இது உங்கள் மனைவிக்கும் நீங்கள் கூறுவது போல் அமைகிறது அல்லவா. //

    என்னாது
    அகிலனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?
    சொல்லவேயில்லையே..

  9. த.அகிலன் says:
    December 5, 2008 at 12:23 pm

    //என்னாது
    அகிலனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?//
    யோவ் சயந்தன்.. மெல்போர்ன் கமல் ஏதோ ஒரு ஆர்வத்தில அவற்ற மனைவியை நினைச்சு எழுதியிருக்கிறார் அதுக்காக நீரும் சேர்ந்து புரளியைக் கிளப்புறீர் (அவனவன் கல்யாணமானவங்களே ஆகல எண்டு அடிச்சு சத்தியம்பண்ணுறான்..) ஒரு கன்னிப்பையன்ர வாழ்க்கையை கழுவுல ஏத்தப்பார்க்கிறீரே…

  10. mathu says:
    February 27, 2009 at 8:11 pm

    கவிதை நல்லாதான் இருக்கு ஆனால் நடைமுறையோடு தான் கொஞ்சம் முரண்டுபிடிக்குது..யுகபாரதிக்கு கல்யாணம் ஆகியிருக்கு சந்தோஷம் ஆனால்..இப்படி லட்சியத்துக்கு துணை கேட்காமல் நாட்டு நிலைமை இவ்வளவு ஆனதுக்கு அப்புறமும் லட்சம் கேட்கிற மன்மதராசா(கற்பனையில்) களுக்கு என்ன செய்யலாம் அகிலன்?
    உங்களை மாதிரி கன்னிப்பையன்கள் தான் இதற்கு ஒரு முடிவு கட்டணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes