01.உன்உப்புக்கரித்த முத்தத்தின்ஞாபகங்களைதனது இறகுகளால்வருடிக்கொண்டேயிருக்கிறது கோடை. வாசல் வரை வந்தும்உள்ளே வராததோழியைப்போல்..முற்றத்தில் படர்ந்துபின்வெளியேறிப்போகிறது வெயில் அறை முழுதும்தன் தகிப்பை நிரவியபடி. 02.கோடைதீர்ந்து விட்டது… தகிப்பின்வாடையைகுடித்தபடி அலைந்துநிழலொடுங்கிக் கிடக்கிறதுகோடையின் குழந்தை…. மழைக்குத் தாளமிடும்சிறுமியின் புன்னகைகூரைகடந்து விழும்முதல் துளியில்கரைந்தவிழ அவள்காலடியில் உடைந்துஅழத்தொடங்குகிறதுகோடை..
Month: August 2007
நேற்றுத் தொலைத்த பகல்…(புகைப்படம்)
புகைப்படம்- த.அகிலன் (செஞ்சோலை)நேற்றுத் தொலைத்த பகல்இனிஎன்றைக்கு விடியும்…
நிகழாக் கவிதை…
என் கவிதையின்கரங்கள்நீண்டபடியிருக்கின்றனசொற்களைத்தேடி…. தாயின் இறகுகளைநீங்கித் தப்பும்ஒர் தனியன் குஞ்சைப்போலசிக்கிக்கொள்ளாதுதப்பியலைகின்றன சொற்கள்… ஊழியோய்ந்த நிலத்தில்எஞ்சியஒற்றைக்குழந்தையின்திணறலெனஅழுதபடியிருக்கிறதுஎன் கவிதையும்அதன் மனமும்….