சாத்தான்கள்ஊருக்குள்திரும்பின.சாத்தான்கள் எப்போதும்புன்னகைகளைவெறுப்பவை.. பகலின் நிறம் மரணம்இரவின் நிறம் பயம்என்றாகியதுநாள். ஊர்பகலில் இறந்தவனைஅடக்கம் பண்ணிவிட்டுஇரவில் அடுத்தசாவிற்குகாத்திருக்கலாயிற்று. பாதித்தூக்கத்தில்அடித்து எழுப்பப்பட்டவெறியில்அலைந்தன சாத்தான்கள். இரவுக்குக் கைகள்முளைத்தது.., கேள்விகளற்றவெறுங்கணத்தில்இரவின் கரங்களில்கோடரிகள் முளைத்தன.., மனிதர்களைத்தறித்து விழுத்தியபடிதனது நிறத்தைஊரெங்கும் பூசிச்செல்கிறதுஇரவு விடியலில்உருவங்களின் கரங்களில்இருந்ததுஇரவின் கோடரி. சூரியனைப்போர்த்தபடிகேள்விகளற்றுநடந்துபோகிறதுஇரவு சாத்தானுடன்.
மக்கள் தொலைக்காட்சி வன்னியில் இருந்து ஓர் பார்வை…
தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடிமக்கள் தொலைக்காட்சி. ஈழம் வன்னியில் இருந்து – கருணாகரன் தமிழ்ச்சினிமா இல்லாமலே தமிழில் ஒரு தொலைக்கட்சி வந்திருக்கு. தமிழிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அறிவிப்பாளர்களும். அத்துடன் தமிழ் நிகழ்ச்சிகள். தமிழ் நிலப்பரப்பின் காட்சிகள். தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள். பிரந்தியப் பேச்சு மொழிகள். இப்படி தமிழ்க்காட்சியூடகங்களில் மாறுதலான ஒரு புதிய தொலைக்காட்சியாக இப்போது அறிமுகமாகியிருக்கிறது மக்கள் தொலைக்கட்சி. சினிமா இல்லாமல், சினிமாக்காரரே இல்லாமல் இந்தத்தொலைக்காட்சி வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இது…
நம்பிக்கை/காத்திருப்பு
பெருமரத்தைபூதமெனப் படியவிட்டுஉறுமிக்கடக்கிறதுவெளிச்சம்…. தனித்து நடக்கும்இரண்டு பாதங்களைக்கவனியாதசகபயணியாய்நீள நடக்கிறது தெருமெளனியாய்…. நான்ஒரு நேரந்தப்பியபயணியைப்போல்காத்திருக்கிறேன்தூரத்தெரியும்ஒளிப்புள்ளிகளை நம்பியபடி…