“வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்அக்காணி முழுவதும் கலகலப்பல்லவோ” இப்படிப்பெரியவர்கள் கவிதைகளை எடுத்துவிட்டுக்கொண்டு இருக்க வாயைப்பிளந்து கொண்டிருந்திருக்கிறேன்.கானாபிரபாவின் பாசையில் சொன்னால் சின்னனுகளாய் இருந்த அனுபவங்கள் இவை. நவராத்திரி என்கிற வார்த்தையை விட அதை அந்த பத்து நாட்களையுமே சரஸ்வதிபூசை என்று சொல்லித்தான் நான் திரிந்திருக்கிறேன். நவராத்திரி என்பது கொஞ்சம் பெரியவர்கள் சொல்லும் சொல்லு. எங்களுக்கென்ன அதைப்பற்றி கவலை மொத்தமாய் சரஸ்வதி பூசை. எங்களுக்கு சரஸ்வதியெல்லாம் அவ்வளவு முக்கியமாக படவில்லை புக்கை…
“எத்தினை பேர்ரா? ஒருத்தன்தாண்ணே” – மலைக்கோட்டை விமர்சனம்.
ஏய்!!!!!!!சர்புர் என்று பறக்கும் டாடாசுமோக்கள்.. மற்றும் இதர கறுத்தக்கலர் புதியவாகனங்கள் எல்லாம் டயர் கிறீச்சிட நிற்க மூட்டை மூட்டையாய் குண்டர்களோடு வந்து இறங்குகிறார் வில்லன். சோவெனக் கொட்டுகின்ற மழை சட்டென்று ஒரு கொலை. முதல் 2 நிமிடத்திலேயே வெறுத்து விட்டது எனக்கு அடடா தெரியாம நுழைஞ்சுப்புட்டியேடா… இயக்குனர் பூபதிபாண்டியனின் இதற்கு முந்தைய படமான திருவிளையாடல். பரவாயில்லை நிறைய காமெடி இருந்தது சலிக்காமல் ஒரு முக்கால்வாசிப்படமாவது பார்க்கக்கூடியமாதிரி இருக்கும். அதே நகைச்சுவையை…
சொற்களைத் திருடிய வண்ணத்திகள்….
நான்கு சுவர்களும்மௌனித்திருந்த ஒருநாளில்எதை எழுதுவதுஎனத் தெரியாது விட்டு வைத்தஎன் நாட்குறிப்பின்இப்பக்கங்களில்இப்போது நான்உன் மௌனத்தை எழுதுகிறேன். உன்மௌனம்….ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கியகுரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது…. உன்கண்களிடமிருந்துவண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்டஅந்த முத்தத்தின் முடிவில்..நமக்கான சொற்களையும்திருடிக்கொண்டு…தம் சிறகுகளால்காலத்தை கடந்தன வண்ணத்திகள்… என்ன சொல்வதுஉன்மௌனங்களைப்பற்றிஎழுத நேர்கையில்முத்தங்களைப் பற்றியும்எழுதவேண்டியிருப்பதை….