சே!
என் அதிகாலைக்கனவுகளில்
தேவதைநுழைகிற
நேரமாய்ப் பார்த்து
காதுகளில் நுழைந்து
தொலைக்கிறது
காண்டாமணியோசை
இறைவா
நான்
உன்னை சபிக்கிறேன்….
த.அகிலன்
கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…
சே!
என் அதிகாலைக்கனவுகளில்
தேவதைநுழைகிற
நேரமாய்ப் பார்த்து
காதுகளில் நுழைந்து
தொலைக்கிறது
காண்டாமணியோசை
இறைவா
நான்
உன்னை சபிக்கிறேன்….
த.அகிலன்
காற்றிறல்நழுவவிட்ட உன்வார்த்தைகளை முட்களாய் மாற்றும் வித்தைஎங்கனம் சாத்தியமாகிறது என்எண்ணக்கூட்டிற்குள்குஞ்சு பொரித்துக்காத்திருக்கும்நிறையக்கேள்விகள். ஆனாலும்அன்பேஎனக்குள் நிகழ்கிறதுஒளியின் நடனம்என் கனவுகளிற்கு ஒளியூட்டியபடி…… நான் கைகளை குவித்துக்கொண்டுகாவலிருக்கிறேன்ஒளியின் நடனம்நின்றுபோகாதிருக்கஇப்போதுதீர்ந்து போயிருக்கிறதுஉள்ளிருந்தேயெழும் கவிதை ஆச்சரிமாய்எனக்கே புரியாதிருக்கிறஇக்கவிதையின் பாடுபொருள் எனினும் எனக்குள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறதுஇன்னும் தீராமல்ஒளியின் நடனம்.
அன்பேஉன் நினைவுகளில்நொருங்கும் என்னிதயத்தை நீயே வைத்துக்ககொள்….. என்தேவதையேபாசாங்குகள்எதுவுமற்ற மெல்லிய மலர் என் இதயம்நீநீ மட்டும் தான் வேண்டும் அதற்கு…சர்வநிச்சயமாய்வாழ்வின் நீளத்துக்கும்நீ மட்டும் தான் வேண்டும் அதற்கு… என்புன்னகையின்ஒரத்தில் இருக்கின்றஅன்பின் பெரும்வலியைஎப்படிச்சொல்லுவது….. தேவதைகள்யாரும் புகமுடியா என்னிதயம்தேவதைகளின் தேவதையேஉன்னால் தான் நொருங்கிற்று கொஞ்சம் இரங்கிவாஎன் இதயத்துள் இறங்கு த.அகிலன்
பெருமாள் கோவில்சிற்பங்களைக் கழுவிக்கொண்டிருக்கிறது மழை நிர்வாணப்பெண்கள்மறுபடியும் நனையமரங்களினிடையே மறையும் கண்ணன். என்காலகளினடியில் மறுபடியும்நழுவி ஓடிக்கொண்டிருக்கிறதுபூமி நீரின் மீதுமுடிவிலிக்கோடுகளைஒற்றைப்புள்ளியில் இருந்துவரைந்து கொண்டிருக்கிறதுஇலையிருந்து நழுவும்ஒற்றைத் துளி. குழந்தைகள் கொப்பிகளைக்கிழிக்கின்றன எனக்குள்மிதக்கத்தொடங்கின கப்பல்கள் இப்போதுநீரினிலாகிறதுகுழந்தைகளின் உலகுயாரேனும் அதைமறுக்கையில் மழைஇடம்பெயர்கிறதுகுழந்தைகளின்கண்களிற்குள்.. எனக்குள்மூழ்கத் தொடங்கினகப்பல்கள்… த.அகிலன்