கண்ணீரும் கம்பலையுமாக ஒரு தாய் கதறுகிறாள் “எனது மகனைக் காப்பாற் றுங்கள் அவன் எனக்கு வேண்டும் தயவு செய்து காப்பாற்றுங்கள்”.
சீடர்கள் எல்லாரும் காத்திருந்தார்கள் நிகழப்போகும் அதிசயத்தின் சாட்சியாய் இருக்கப்போகிறோம் என்கிற முறுவல் அவர்களிடம் மிதந்து …
எனது கவிதைக்குள்
ஒழிந்திருக்கிறது
திசையறியாப்பறவையின்
சிறகுகளின் தத்தளிப்பு..
உள்ளோடும்
சொற்களினதும்
வாக்கியங்களினதும்
அர்த்தங்களை நான் மறந்துவிட்டேன்
இறகினைப்போல் அலைந்து
கொண்டிருக்கிறது கவிதை
திசையறியாப் பறத்தலின்
தவிப்பில்
உதிரும் இலைகளைப்
பின்பற்றியபடியிருக்கிறது மனம்
எனை ஏந்திக்கொண்டிருப்பது
காற்றின்
எந்தக்கிளை
காதல் எப்போதும் தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கிறது. உலகத்தின் நியதிகளைச் நீர்த்துப்போகச் செய்யவும் தனக்கான விதிகளை எழுதிக்கொள்ளவும் காதலால் முடிந்திருக்கிறது. காதலின் அழகான முடிச்சுக்கள் விழுகின்ற இடங்கள் நம்பமுடியாதவை சிலசமயங்களில் அதிர்ச்சிகளைத் தரவல்லவை.
காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது.. தன்னைத்தானே. எந்த எதிர்பார்ப்புகளுமற்று ஒரு கடைக்கண் பார்வையையோ …
உலகத்தின் அழகான வார்த்தைகள் ஒருவனிடம் மண்டியிட்டுக்கொண்டிருந்தன. என்னையும் உன் காவியங்களில் சேர்த்துக்கொள் என்று அவனிடம் கெஞ்சின. பெண்கள் அவனது வார்த்தைகளிடம் அடிமையாயிருந்தனர். வார்த்தைகள் அவனிடம் அடிமையாயிருந்தன. முறிந்த சிறகுகள் என்கிற தன் காதல் காவியத்தை கலீல்ஜிப்ரான் உலகத்திற்குக் கொடுத்தார். அந்த அளப்பெரிய …
01.
என் சனங்களின் பசியை
எழுதும்
இந்த வார்த்தைகளின்
வெட்கத்தையும் துயரையும்
நீ
அறிவாயோ இறைவா?
எனது
குழந்தைகளின் இரவுகளை
தயைகூர்ந்து
வெடிச்சத்தங்களால்
நிரப்பாதிரும்..
இரண்டு
துப்பாக்கிகளுக்கிடையில்
மிரள்கிற அவர்களின்
மழலைச் சொற்களின்
அச்சத்தை விலக்கும்..
என்
சனங்கள் பாவம்
முன்னொரு போது
போரினின்று
நான் வெளியேறுகையில்
ஒன்பதாம் திசையில்
வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை
அவர்களுடைய வானத்திலேயும்
ஒளிரச்செய்யும்
என் ஆண்டவரே…..
வண்ண நிலவனின் கடல் புரத்தில் வாசித்தேன். நீண்டநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நாவல்.வாசித்து முடித்தபின்னும் கடல் புரம் அலைகளைப்போல் இரைந்துகொண்டிருக்கிறது இன்னமும். அதன் சொற்களாலும் அதனுள் நடமாடுகிற மனிதர்களாலும். தான் நேசிக்கிற ஒன்றைத் தவிர்க்க,அல்லது பிரிய நிர்ப்பந்திக்கப்படுகிற மனிதர்களின் துயரம் அந்த நாவலில் குடிகொண்டிருக்கிறது.
அந்த …
என்னை நிராகரியுங்கள்
எல்லாமுமாகிய
என் சர்வவல்லமை பொருந்திய
பிதாக்களே
என்னை நிராகரியுங்கள்
எப்போதும்
துயரத்தின் சாயல் படிந்த
ஊரின் தெருக்களை விட்டேகிய
கொடுங்குற்றத்திற்காக
என்னை நிராகரியுங்கள்
உங்களிற்காக
கொஞ்சப்புன்னகைகளையும்
எனக்காக
உயிர் குறித்த நம்பிக்கைகளையும்
உங்களிடம் அச்சத்தைஊட்டக்கூடிய
மரணங்கள் பற்றிய கதைகளையும்
மட்டுமே
வைத்துக்கொண்டிருக்கும்
ஏதிலியாகிய என்னை
மேட்டிமை தங்கிய பிரபுக்களே
நிராகரியுங்கள்.
உங்கள்
தொழுவத்துக்குள் நுழைந்துவிட்ட
ஒரு அருவருக்கத்தக்க
ஓநாயைப் போல என்னை எண்ணுகிறீர்கள்
எனக்குத் தெரிகிறது
வெறுப்பின் கடைசிச்சொட்டையும்
கக்கித் தொலைத்துவிடுகிற
உமது விழிகளிடம்
எனக்குச் சொல்வதற்கு எதுவுமில்லை
ஊரில் எனக்குச் …
இரண்டு வாரங்களாக இந்தப் புத்தகம் என்னுடன் எல்லா நேரத்திலும் பயணித்து வந்தது. ஒன்றிரண்டு நாட்களில் வாசித்திருக்க முடியும். ஆனால் இப்புத்தகத்தின் ஆழமும், வாசித்தபின் ஏற்படும் மன அழுத்தமும் சொல்லில் அடங்காது. கதையென்று அதை எப்படிக் கூற முடியும்? போரின் கொடூரங்களை பேரழிவுகளை …