01. 25.02.2009 (முன்) நமது தொலைபேசி உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கின்றன நமக்குச் சொந்தமற்ற செவிகள். பீறிட்டுக்கிளம்பும் சொற்கள் பதுங்கிக் கொண்டபின் உலர்ந்து போன வார்த்தைகளில் நிகழ்கிறது. நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும் உன் ஒப்புதல் வாக்குமூலம். வெறுமனே எதிர்முனை இரையும் என் கேள்விகளின் போது நீ எச்சிலை விழுங்குகிறாயா? எதைப்பற்றியும் சொல்லவியலாச் சொற்களைச் சபித்தபடி ஒன்றுக்கும் யோசிக்காதே என்கிறாய்.. உன்னிடம் திணிக்கப்பட்ட துப்பாக்கிகளை நீ எந்தப்பக்கமாகப் பிடிப்பாய் வாய் வரை வந்த கேள்வியை…
கனவு கலையாத கடற்கன்னி – அனிதா கவிதைகள்
தனது நான்கைந்து கவிதைத் தொகுதிகளைக் கையில் திணித்தபடி கவிதை பற்றி விடாப்பிடியாக ஒருவர் பேசியது இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. நீங்கள் கடைசியாக வாசித்த கவிதைப்புத்தகம் எது எனத் என் நாக்குத்தவறிக் கேட்டதில் அவர் அற்புதமானதொரு கருத்தைச் சொன்னார்.. “நான் வேறு புத்தகங்கள் படிப்பதில்லைத் தம்பி… அவற்றில் ஒரு வரியைப் படிப்பதற்கிடையில் எனக்கு நான்கு வரி தோன்றிவிடுகிறது நானென்ன செய்ய… எழுதுவது தானே முக்கியம்” என்றார். நான் அவர் வயசு…
அம்மாவின் சுருதிப்பெட்டி..
நீங்கள் ஈழம் பற்றிய வீடீயோக்கள் வருகிற எந்த இணையத்தளத்திலும் பார்க்கலாம். தனது சோட்டிக்கு மேலால் பச்சைப் புடைவையைச் சுற்றியபடி வெறுங்கையுடன் தனித்து திசையற்று நடந்து போகிற பெண் என்ர அம்மாதான். பத்துமாதம் என்னைச் சுமந்து பெத்த அம்மாதான் அது. இரண்டு ஆண் பிள்ளைகளையும் ஒரு பொம்பிளைப் பிள்ளையையும் பெத்து வளர்த்து ஆளாக்கின அதே அம்மாதான்…. ஸ.. ப.. ஸ.. அம்மா சுருதி சேர்த்துக்கொள்ளுவது ஒரு அழகுதான். எனக்கு அம்மாவின் பாட்டுக்கேட்பதை…