ஏ.குஞ்சம்மா இந்தப்பெயர் எனக்கு இன்னமும் நினைவிலிருப்பதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. பில் போடுற மேசையைவிடவும் கொஞ்சமே உயரம் கூடிய பொடியனாக இருந்தாலும் எந்தவிதமான சந்தேகக் குறியையும் முகத்தில் காட்டாமல் எனது முதலாவது தொழில்முறைப் புகைப்படத்துக்கு போஸ்கொடுத்த அற்புதமான பெண் அவர்.(அப்பாவிப் பெண்) நான் அப்போது ஸ்கந்தபுரத்தில் யோறேக்ஸ் ஸ்ரூடியோவில்(yorex studio) வேலைக்குச் சேர்ந்திருந்தேன். வேலைக்குச் சேர்ந்திருந்தேன் எண்டு சொல்வது சரியா என்றெனக்கு இப்பவும் தெரியாது ஆனாலும் அப்படித்தான் சொல்லிக்கொண்டேன். மந்தையிலிருந்து…
பாவமன்னிப்பு
எனது சொற்களை அடைத்துக்கொண்டிருப்பது எது? கைநழுவிய சொற்களா? சொற்களால் செய்யப்பட்ட கொலைவாட்களா? உதிர்ந்துபோன காலமும் மலராத கணமுமா? என் சொற்களைத் தேக்கிவைத்திருப்பது எது? அவசர அவசரமாகத் தாம் நடந்த தடங்களை அழித்தபடி வழிகாட்டிகள் திசைகளை மாற்றினர் கொலைவாட்களைப் பதுக்கியபடி நண்பர்கள் குலாவினர் எதிரிகளிடம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது நேர்மை. யேசுநாதர்கள் பெருகிப்போயிருக்கும் சபையில் ஓரு குற்றவாளியாய் உள்நுழைகிறேன். எல்லோரிடமும்… போதனைகள் இருக்கின்றன தண்டனைகள் இருக்கின்றன கேள்விகள் இருக்கின்றன பதில்கள் இருக்கின்றன நியாயங்கள்…
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்
“சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்” என்ற அமைப்பு இலங்கையில் “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு” என்ற பெயரில் மாநாடு ஒன்றினை ஒழுங்குசெய்திருக்கிறது. இம்மாநாடு தொடர்பாக பல்வேறு ஐயங்களும் கேள்விகளும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன. இம்மாநாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமுகமாகவும் ஏற்பட்டுள்ள ஐயங்களைத் தெளிவுபடுத்துமுகமாகவும் இம்மாநாட்டின் இலங்கை இணைப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தி. ஞானசேகரன் (ஞானம் சிற்றிதழ் ஆசிரியர்) அவர்களோடு உரையாடினோம். உரையாடல் ஒலிவடிவில் பதிவுசெய்யப்பட்டது. ஒலிப்பதிவின் சுருக்கம் இங்கே உரைவடிவிலும்…