பறத்தலின் திசை
Posted by த.அகிலன் on Jun 17th, 2009
2009
Jun 17
எனது கவிதைக்குள்
ஒழிந்திருக்கிறது
திசையறியாப்பறவையின்
சிறகுகளின் தத்தளிப்பு..
உள்ளோடும்
சொற்களினதும்
வாக்கியங்களினதும்
அர்த்தங்களை நான் மறந்துவிட்டேன்
இறகினைப்போல் அலைந்து
கொண்டிருக்கிறது கவிதை
திசையறியாப் பறத்தலின்
தவிப்பில்
உதிரும் இலைகளைப்
பின்பற்றியபடியிருக்கிறது மனம்
எனை ஏந்திக்கொண்டிருப்பது
காற்றின்
எந்தக்கிளை
