“எத்தினை பேர்ரா? ஒருத்தன்தாண்ணே” – மலைக்கோட்டை விமர்சனம்.
ஏய்!!!!!!!
சர்புர் என்று பறக்கும் டாடாசுமோக்கள்.. மற்றும் இதர கறுத்தக்கலர் புதியவாகனங்கள் எல்லாம் டயர் கிறீச்சிட நிற்க மூட்டை மூட்டையாய் குண்டர்களோடு வந்து இறங்குகிறார் வில்லன். சோவெனக் கொட்டுகின்ற மழை சட்டென்று ஒரு கொலை. முதல் 2 நிமிடத்திலேயே வெறுத்து விட்டது எனக்கு அடடா தெரியாம நுழைஞ்சுப்புட்டியேடா…
இயக்குனர் பூபதிபாண்டியனின் இதற்கு முந்தைய படமான திருவிளையாடல். பரவாயில்லை நிறைய காமெடி இருந்தது சலிக்காமல் ஒரு முக்கால்வாசிப்படமாவது பார்க்கக்கூடியமாதிரி இருக்கும். அதே நகைச்சுவையை எதிர்பார்த்து போனேன். கொஞ்சநேரமாவது சிரிச்சிக்கிட்டு இருக்கலாமேன்னுட்டு. கவுத்துப்புட்டார் பூபதிபாண்டியன்.
ஊரையே கலக்குகிற வழமையான வில்லன் அவருக்கு ஒரு பாசக்காரத் தம்பி. (இப்ப எல்லாம் ஹீரோக்களை விட வில்லன்களிற்குத்தான் தனது உடன்பிறப்புக்களிற்காக துடித்துப்போகிற சான்சைத்தருகிறார்கள் இயக்குனர்கள்.)
“அடிங்கடா அவனை”
தூக்கிட்டு வாங்கடா அவனை/ளை என்று”
முதல்பாதியில் காமெடி இருக்கிறது என்று சொல்லலாம். விசாலுக்கு கொஞ்சம் பொருந்தித்தான் இருக்கிறது காமெடி. விசால் இன்னொரு விஜய் ஆகிற முயற்சியில் இருக்கிறார் என்பது தெரிகிறது.”புரட்சித்தளபதி” என்கிற அடைமொழி எரிமலைக்குழம்பாய் திரையில் வழிகிறது.(ரொம்ப மினக்கெடுகிறார்) அவரது ஸ்டைலும் கொஞ்சம் போக்கிரி விஜயை ஞாபகப்படுத்துகிறது.
அடடே முத்தழகுவா இவர். பருத்திவீரனில் பார்த்ததுக்கு மொட்டை அடிக்கலாம் போல. அப்படி ஒரு ஆளாக வருகிறார் பரியாமணி. அவரும் ஹீரோவும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகமலே இரண்டு பாட்டுக்களிற்கு ஆடிவிடுகிறார். பிறகு காக்காய்க்கு சோறு வைக்கிறார். இரண்டு மூன்று சீன்களில் அழுகிறார் அவ்ளோதான். (அமீர் பார்த்தா ரூம்போட்டு அழுவார்) பாடல்காட்சிக்களில் ஏகத்துக்கும் ஏறிக்கிடக்கிறது ஆடை அப்டியே மெயின்ரெயின் பண்ணவேண்டும் அம்மணி என்று இறைவனை வேண்டுவோம்.
போக்கிரிக்கு பிறகு மறுபடியும் தாளமிட வைத்திருக்கிறார் மணிசர்மா. “ஆத்தா ஆத்தோரமா வாறியா” இன்னும் கொஞ்சநாளைக்கு சேனல்களில் போட்டு கிழிக்கப்படும். “தேவதையே வா வா” நல்ல கவித்துவமான மெலடி. யுகபாரதியின் பேனா பூபதிபாண்டியனுக்கு கொஞ்சம் ஓவர்ரைம் வேலைதான் செய்கிறது போல.
ஆசிஸ் வித்தியர்த்தியை ஒரு கூச்சலுடன் பார்க்கையில் இருக்கிற வில்லன் போதாதுண்னு இவர் வேறயா என்று தோன்றுகிறது. பிறகு அட இவர் வில்லனில்லையா என்று மனசுக்குள் வருகிற நிம்மதியை காப்பாத்துகிறார் மனுசன். ஆசிசும் ஊர்வசியும் வருகிற சீன்கள் செமகாமெடி அதுதான் படத்தை கொஞ்சமேனும் நிமிர்த்துகிறது. இதில் ஏகத்துக்கு இரைச்சல் போட்டுக்கொண்டிருந்த வில்லன்களையெல்லாம் கொண்டு வந்து காமெடி பண்ணவைத்திருக்கிறார் இயக்குனர் அதிலே பொன்னம்பலமும் ஒருவர் அவருல்லாம் ஏன்வாறார் என்ன பண்றார் ஒண்ணுமே விளங்கலே படத்துல .. பூபதி பாண்டியன் காமெடியை கைவிட்டு கொஞ்சம் அடிதடிக்கு முயற்சிக்கிறார் போல சரியா வரல்ல அவருக்கு..வேற எதுனாச்சும் முயற்சிக்கலாம்.
நானும் எனது கருத்துக்களை படத்தின் பின்பாதி மாதிரி குழப்பாம இழுக்காம முடிச்சுக்கிறேன்.
இனி உங்க இஸ்டம்…

September 28th, 2007 at 4:22 pm
//இயக்குனர் பூபதிபாண்டியனின் இதற்கு முந்தைய படமான திருவிளையாடல். பரவாயில்லை நிறைய காமெடி இருந்தது சலிக்காமல் ஒரு முக்கால்வாசிப்படமாவது பார்க்கக்கூடியமாதிரி இருக்கும். அதே நகைச்சுவையை எதிர்பார்த்து போனேன். கொஞ்சநேரமாவது சிரிச்சிக்கிட்டு இருக்கலாமேன்னுட்டு. கவுத்துப்புட்டார் பூபதிபாண்டியன்.//
//முதல்பாதியில் காமெடி பின்னிஎடுக்கிறார்கள் //
//ஆசிசும் ஊர்வசியும் வருகிற சீன்கள் செமகாமெடி அதுதான் படத்தை கொஞ்சமேனும் நிமிர்த்துகிறது.//
//பூபதி பாண்டியன் காமெடியை கைவிட்டு கொஞ்சம் அடிதடிக்கு முயற்சிக்கிறார் போல சரியா வரல்ல அவருக்கு..//
அண்ணா.. எண்ணன்னா சொல்ல வர்றேள்!
சோ ராமசாமி மாதிரி மாத்தி மாத்தி பேசி மண்டைக்குடைச்சல் வரவைக்கிறீகளே?
September 28th, 2007 at 4:27 pm
அதான் அதேதான் கரட்டா புரிஞ்சுடுத்து நோக்கு… இப்டி குழப்புறாள்னுதான் சொல்லவரேன் படத்துல புரிஞ்சுதோல்லியோ..
September 28th, 2007 at 4:29 pm
//லக்கிலுக் said…
BTW, நங்கநல்லூர் வெற்றிவேலில் பார்த்தீர்களா?//
ஏன் இந்த கொலைவெறி…
September 28th, 2007 at 4:39 pm
\\உடனே புரட்சித்தளபதி சோகமாகி (அதாங்க நம்ம ||விசர்ல்||) யாரது என்னை ஜெயித்து உங்க மனசில இடம்பிடிச்சவர் அவர் காலைத்தொட்டு கும்பிடணும் என்று தத்துவமெல்லாம் பேச\\
விசர்ல் என்றெழுதினது தெரியாமல் விட்ட பிழையோ?
September 28th, 2007 at 4:43 pm
//சினேகிதி said…
விசர்ல் என்றெழுதினது தெரியாமல் விட்ட பிழையோ?//
தெரியாமத்தான் நடந்து போச்சு சினேகிதி. அவ்வளவு கோபமில்லை எனக்கு விசால்ல..
ஒரு மாறுதலுக்காக சினிமா விமர்சனம் எழுதினா வேலைக்காகாது போல இருக்கே…(நமக்கு இந்த ரோல் சரிவராதோ)
September 28th, 2007 at 4:58 pm
//BTW, நங்கநல்லூர் வெற்றிவேலில் பார்த்தீர்களா?//
ஏன் இந்த கொலைவெறி…//
அகிலன் அப்படியே ஒரு எட்டு டோண்டுசார்வாளை பாத்துட்டு வந்திருக்கலாமே?
September 29th, 2007 at 6:40 pm
இதைப் போலத் தொடர்ந்தும் எழுதினீங்கள் என்றால் இந்தப் பக்கம் வரவேண்டிய தேவையே இருக்காது தம்பி
October 9th, 2007 at 11:13 am
ஆஷிஷ் – ஊர்வசி காதல் ஜோடி விஷால்-ப்ரியாமணி காதல் ஜோடியை தோற்க்கடிச்சுட்டாங்க. ஒரு டீ, ஒரு பன்.. அதிலே வந்த காதல்.. சூப்பர். காமெடி மட்டும் திரும்ப திரும்ப பார்க்கலாம்.